உடுமலையில் 'அறிவொளி சுடர்கள்' நூல் வெளியீடு - பள்ளி மற்றும் நூலகங்களுக்கு புத்தகம் வழங்கல்!

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நடைபெற்ற 'அறிவொளி சுடர்கள்' நூல் வெளியீட்டு விழாவில் முன்னாள் மாவட்ட ஆட்சியர் ச.வி.சங்கர் கலந்து கொண்டு நூலை வெளியிட்டார். இதனையடுத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு 'அறிவொளி சுடர்கள்' நூல் வழங்கப்பட்டன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நடைபெற்ற அறிவொளி சுடர்கள் நூல் வெளியீட்டு விழாவில் முன்னாள் மாவட்ட ஆட்சியர் ச.வி.சங்கர் கலந்து கொண்டார்.

அறிவொளி இயக்கம் என்ற அமைப்புகள் கடந்த 1992ஆம் ஆண்டு முதல் 1998 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு முழுவதும் கல்வி சேவையாற்றியது. இந்த அமைப்பில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான தன்னார்வலர்கள் கலந்து கொண்டு சேவைகளில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், அறிவொளி இயக்கம் 30 ஆண்டுகள் நிறைவையொட்டி, கோவையில் சமீபத்தில் அறிவொளி இயக்க குடும்ப விழா நடைபெற்றது. இந்த விழாவில் கடந்த 30 ஆண்டுகளாக அறிவொளி இயக்கத்தின் களப்பணிகளை தொகுத்து அறிவொளி சுடர்கள் என்ற நூல் வெளியிடப்பட்டது.



இதனிடையே, உடுமலையில் அறிவொளி சுடர்கள் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில், முன்னாள் கோவை மாவட்ட ஆட்சியரும் அறிவொளி திட்ட தலைவருமான ச.வி.சங்கர் கலந்து கொண்டு நூல் வெளியீட்டு விழாவை சிறப்பித்தார்.



இந்த நூல் அனைவருக்கும் பயன்பட வேண்டும் என்ற நோக்கில் உடுமலை பகுதி நூலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு அறிவொளி சுடர்கள் நூல் வழங்கப்பட்டது.



இதை உடுமலை முன்னாள் அறிவொளித்திட்ட ஒருங்கிணைப்பாளர் சிவராஜ், குடிமங்கலம் ஒன்றிய திட்ட ஒருங்கிணைப்பாளர் மணி, பணி நிறைவு நூலகர் கணேசன் ஆகியோர் மலையாண்டிபட்டினம் நூலகம், மலையாண்டிபட்டினம் அரசு உயர்நிலைப்பள்ளி, உடுமலை கிளை நூலகம் 2 மற்றும் 3 நூலகங்களுக்கும் அறிவொளி சுடர்கள் நூல்களை வழங்கினர்.

இதேபோல் மற்ற நூலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கும் அறிவொளி சுடர்கள் நூல்கள் வழங்கப்பட உள்ளதாக சிவராஜ் தெரிவித்தார்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...