கோவையில் 10,11,12 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு இன்று தொடக்கம்!

கோவை மாவட்டத்தில் 254 மையங்களில் 10, 11, 12 ஆகிய மாணவர்களுக்கான செய்முறை தேர்வு தொடங்கியுள்ளது. பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் 17,356 மாணவர்களும், கோவை கல்வி மாவட்டத்தில் 69,111 மாணவர்களும் தேர்வெழுத உள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பூபதி தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்டத்தில் 10, 11, 12 ஆகிய மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் இன்று தொடங்கியுள்ளன.

தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதேபோல் பிளஸ் 1 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 14ம் தேதி தொடங்கி ஏப்ரல் 5ம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் 10 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் 14ம் தேதி முதல் ஏப்ரல் 5ம் தேதி வரை நடக்கிறது.

இந்நிலையில், எஸ்.எஸ்.எல்.சி., 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் மார்ச் 1ஆம் தேதியான இன்று துவங்கியுள்ளது. இன்று தொடங்கியுள்ள இந்த செய்முறை தேர்வுகள் வரும் மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பேசிய முதன்மை கல்வி அலுவலர் பூபதி, கோவை மாவட்டம் முழுவதும் 254 மையங்களில் 10, 11, 12 ஆகிய மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் நடைபெறுகிறது. பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் 17,356 மாணவர்களும், கோவை கல்வி மாவட்டத்தில் 69,111 மாணவர்களும் தேர்வெழுத உள்ளதாக தெரிவித்தார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...