கோவையில் 10,11,12 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு இன்று தொடக்கம்!

கோவை மாவட்டத்தில் 254 மையங்களில் 10, 11, 12 ஆகிய மாணவர்களுக்கான செய்முறை தேர்வு தொடங்கியுள்ளது. பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் 17,356 மாணவர்களும், கோவை கல்வி மாவட்டத்தில் 69,111 மாணவர்களும் தேர்வெழுத உள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பூபதி தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்டத்தில் 10, 11, 12 ஆகிய மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் இன்று தொடங்கியுள்ளன.

தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதேபோல் பிளஸ் 1 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 14ம் தேதி தொடங்கி ஏப்ரல் 5ம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் 10 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் 14ம் தேதி முதல் ஏப்ரல் 5ம் தேதி வரை நடக்கிறது.

இந்நிலையில், எஸ்.எஸ்.எல்.சி., 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் மார்ச் 1ஆம் தேதியான இன்று துவங்கியுள்ளது. இன்று தொடங்கியுள்ள இந்த செய்முறை தேர்வுகள் வரும் மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பேசிய முதன்மை கல்வி அலுவலர் பூபதி, கோவை மாவட்டம் முழுவதும் 254 மையங்களில் 10, 11, 12 ஆகிய மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் நடைபெறுகிறது. பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் 17,356 மாணவர்களும், கோவை கல்வி மாவட்டத்தில் 69,111 மாணவர்களும் தேர்வெழுத உள்ளதாக தெரிவித்தார்.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...