மு.க ஸ்டாலின் தாக்கப்பட்டதை கண்டித்து கோவையில் திமுகவினர் போராட்டம்

தமிழக சட்டசபையில் இன்று திமுக எதிர்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் அவைக்காவலர்களால் தாக்கப்பட்டதை கண்டித்து கோவையில் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

தமிழக சட்டசபையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. ஆனால் சபாநாயகர் அதை நிராகரித்துவிட்ததால், சட்டசபையில் அமளி ஏற்பட்டது. இதனால் திமுக உறுப்பினர்கள் வலுக்கட்டாயமாக அவைக் காவலர்களால் வெளியேற்றப்பட்டனர். இதில் திமுக எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட தி.மு.க.வில் பலர் தாக்கப்பட்டனர். இதனை கண்டித்து மு.க ஸ்டாலின் சென்னை மெரினாவில் உள்ள காந்தி சிலை முன்பு போராட்டம் நடத்தி வருகிறார். இதனை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதன் ஒருபகுதியாக, கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள கோயமுத்தூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு கோவை திமுக இளைஞர் அணி சார்பில் கோட்டை அப்பாஸ் தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் சட்டமன்ற உறுப்பினர் தனபாலுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

அதேபோல், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொங்கலூர் பழனிச்சாமி தலைமையில் 100க்கும் மேற்பட்ட திமுகவை சேர்ந்த தொண்டர்கள் தனபாலுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...