கோவை வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் கடும் பனிமூட்டம் - வாகன ஓட்டிகள் அவதி!

கோவை மாவட்டம் வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் இன்று அதிகாலை முதல் கடுமையான பனிமூட்டம் நிலவியதால், எதிரில் வரும் வாகனங்கள் தெரியாததால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே வாகங்களை இயக்கி சென்றனர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் கடுமையான பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.



வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் இன்று அதிகாலை முதலே கடும் பனிமூட்டம் காணப்படுகிறது. வால்பாறை பகுதியில் சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், இன்று காலை பனிமூட்டம் காணப்பட்டது.



இதில் பொள்ளாச்சி செல்லும் வழியில் கவர்கல், சக்தி, தலனார், வாட்டர் பால்ஷ், அட்டகட்டி போன்ற எஸ்டேட் பகுதிகளில் அதிக பனிமூட்டம் காணப்பட்டது. இதனால் வால்பாறையில் - பொள்ளாச்சி இடையே செல்லும் வாகனங்கள், எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே இயக்கி சென்றனர்.



பனிமூட்டம் காணப்படும் நிலையில், இருசக்கர, நான்கு சக்கர மற்றும் கனரக வாகனங்கள் அதிவேகமாக செல்லுவதால் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் மலைப் பகுதிகளில் செல்லும் வாகனங்கள் வேககட்டுப்பாடுடன் செல்லவும், இருசக்கர வாகனங்கள் மெதுவாகவும் கவனமாகவும் செல்லும்படி வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...