கோவை வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் கடும் பனிமூட்டம் - வாகன ஓட்டிகள் அவதி!

கோவை மாவட்டம் வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் இன்று அதிகாலை முதல் கடுமையான பனிமூட்டம் நிலவியதால், எதிரில் வரும் வாகனங்கள் தெரியாததால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே வாகங்களை இயக்கி சென்றனர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் கடுமையான பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.



வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் இன்று அதிகாலை முதலே கடும் பனிமூட்டம் காணப்படுகிறது. வால்பாறை பகுதியில் சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், இன்று காலை பனிமூட்டம் காணப்பட்டது.



இதில் பொள்ளாச்சி செல்லும் வழியில் கவர்கல், சக்தி, தலனார், வாட்டர் பால்ஷ், அட்டகட்டி போன்ற எஸ்டேட் பகுதிகளில் அதிக பனிமூட்டம் காணப்பட்டது. இதனால் வால்பாறையில் - பொள்ளாச்சி இடையே செல்லும் வாகனங்கள், எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே இயக்கி சென்றனர்.



பனிமூட்டம் காணப்படும் நிலையில், இருசக்கர, நான்கு சக்கர மற்றும் கனரக வாகனங்கள் அதிவேகமாக செல்லுவதால் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் மலைப் பகுதிகளில் செல்லும் வாகனங்கள் வேககட்டுப்பாடுடன் செல்லவும், இருசக்கர வாகனங்கள் மெதுவாகவும் கவனமாகவும் செல்லும்படி வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

Newsletter

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...