மாநகராட்சி பள்ளியில் காலை உணவுத்திட்டம் - குழந்தைகளுடன் சிற்றுண்டி சாப்பிட்ட ஆட்சியர்!

கோவை மாவட்டம் சிங்காநல்லூர் பகுதியில் உள்ள வரதராஜபுரம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி மற்றும் மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.



கோவை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதற்கட்டமாக அரசு தொடக்கப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியதை தொடர்ந்து பல்வேறு பள்ளிகளில் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. காலையில் உண்பதற்கு உகந்த பொங்கல், இட்லி, சுண்டல் ஆகியவை இத்திட்டத்தின் கீழ் மாணவ-மாணவியருக்கு வழங்கப்படுகின்றன.



அதன் தொடர்ச்சியாக, கோவை மாவட்டத்தில் சிங்காநல்லூர் வரதராஜபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மற்றும் கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.



அப்போது,பள்ளி மாணவர்களுடன் இருவரும் அமர்ந்து காலை உணவை அருந்தினர். இந்நிகழ்ச்சின் மாமன்ற உறுப்பினர் இலக்குமி இளஞ்செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து, கோவை மாவட்டம் முழுவதும் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...

சிங்காநல்லூர் தொகுதியில் MGR வேடத்தில் வாக்கு சேகரித்த AIADMK வேட்பாளர் கே ஆர். ஜெயராம்

சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram MGR வேடமனிந்து நந்தா நகர், திருக்குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி...

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...