மாநகராட்சி பள்ளியில் காலை உணவுத்திட்டம் - குழந்தைகளுடன் சிற்றுண்டி சாப்பிட்ட ஆட்சியர்!

கோவை மாவட்டம் சிங்காநல்லூர் பகுதியில் உள்ள வரதராஜபுரம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி மற்றும் மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.



கோவை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதற்கட்டமாக அரசு தொடக்கப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியதை தொடர்ந்து பல்வேறு பள்ளிகளில் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. காலையில் உண்பதற்கு உகந்த பொங்கல், இட்லி, சுண்டல் ஆகியவை இத்திட்டத்தின் கீழ் மாணவ-மாணவியருக்கு வழங்கப்படுகின்றன.



அதன் தொடர்ச்சியாக, கோவை மாவட்டத்தில் சிங்காநல்லூர் வரதராஜபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மற்றும் கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.



அப்போது,பள்ளி மாணவர்களுடன் இருவரும் அமர்ந்து காலை உணவை அருந்தினர். இந்நிகழ்ச்சின் மாமன்ற உறுப்பினர் இலக்குமி இளஞ்செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து, கோவை மாவட்டம் முழுவதும் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

மாணவர் அமுதன் மரணம், தமிழகத்தில் அதிகரிக்கும் குற்றங்களை கண்டித்து கோவையில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

கோவை மாணவர் அமுதன் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தமிழகத்தில் கொலை, கொள்ளை மற...

கோவை நவக்கரை ஏ.ஜே.கே. கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வுடன் சிறப்பான ஓணம் விழா

கோவை நவக்கரையில் உள்ள ஏ.ஜே.கே. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 14 முதல் 20 வரை ஓணம் விழா கொண்டாடப்பட்டது. போதைப்...

பேரூர் பகுதியில் 1.10 டன் புகையிலை பொருள்கள் பறிமுதல்: ஒருவர் கைது

கோவை மாவட்ட காவல்துறை பேரூர் பகுதியில் சுமார் 1.10 டன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ஒருவரை கைது செ...

மசக்காளிபாளையம் நகராட்சிப் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் முதலிடம்

கோயம்புத்தூர் மாவட்ட அளவில் நடைபெற்ற கேரம் போட்டியில் மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்கள் ஒற்றையர் மற்று...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் பொள்ளாச்சி பிரதான சாலையில் முட்புதர் அகற்றும் பணி

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண் 98ல் பொள்ளாச்சி பிரதான சாலை எல்ஐசி காலனி பகுதியில் சாலையோர செடிகள் மற்றும் முட...

கோவை ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி – உயிர் அமைப்பு இடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை வலுப்படுத்த ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மற்றும் உயிர் அமைப்பு இடையே புரிந்துண...