மாநகராட்சி பள்ளியில் காலை உணவுத்திட்டம் - குழந்தைகளுடன் சிற்றுண்டி சாப்பிட்ட ஆட்சியர்!

கோவை மாவட்டம் சிங்காநல்லூர் பகுதியில் உள்ள வரதராஜபுரம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி மற்றும் மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.



கோவை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதற்கட்டமாக அரசு தொடக்கப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியதை தொடர்ந்து பல்வேறு பள்ளிகளில் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. காலையில் உண்பதற்கு உகந்த பொங்கல், இட்லி, சுண்டல் ஆகியவை இத்திட்டத்தின் கீழ் மாணவ-மாணவியருக்கு வழங்கப்படுகின்றன.



அதன் தொடர்ச்சியாக, கோவை மாவட்டத்தில் சிங்காநல்லூர் வரதராஜபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மற்றும் கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.



அப்போது,பள்ளி மாணவர்களுடன் இருவரும் அமர்ந்து காலை உணவை அருந்தினர். இந்நிகழ்ச்சின் மாமன்ற உறுப்பினர் இலக்குமி இளஞ்செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து, கோவை மாவட்டம் முழுவதும் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 30ஆம் தேதி நீர்மட்ட நிலவரம் வெளியா...