மாநகராட்சி பள்ளியில் காலை உணவுத்திட்டம் - குழந்தைகளுடன் சிற்றுண்டி சாப்பிட்ட ஆட்சியர்!

கோவை மாவட்டம் சிங்காநல்லூர் பகுதியில் உள்ள வரதராஜபுரம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி மற்றும் மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.



கோவை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதற்கட்டமாக அரசு தொடக்கப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியதை தொடர்ந்து பல்வேறு பள்ளிகளில் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. காலையில் உண்பதற்கு உகந்த பொங்கல், இட்லி, சுண்டல் ஆகியவை இத்திட்டத்தின் கீழ் மாணவ-மாணவியருக்கு வழங்கப்படுகின்றன.



அதன் தொடர்ச்சியாக, கோவை மாவட்டத்தில் சிங்காநல்லூர் வரதராஜபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மற்றும் கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.



அப்போது,பள்ளி மாணவர்களுடன் இருவரும் அமர்ந்து காலை உணவை அருந்தினர். இந்நிகழ்ச்சின் மாமன்ற உறுப்பினர் இலக்குமி இளஞ்செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து, கோவை மாவட்டம் முழுவதும் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...