கோவையில் குப்பைமேட்டில் திடீர் தீவிபத்து - மாநகராட்சிக்கு பொதுமக்கள் கோரிக்கை

கோவை செங்காளியப்பன் நகர் பகுதியில் உள்ள குப்பை மேட்டில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தால் அப்பகுதியே புகைமூட்டமாக காட்சியளித்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறை வீரர்கள் தண்ணீரை பீச்சு அடித்து பற்றியெரிந்த தீயை அணைத்தனர்.



கோவை: கோவை அடுத்த செங்காளியப்பன் நகர் பகுதியில் ரயில்வே பிரிட்ஜ் அருகாமையில் குப்பைமேடு ஒன்று இருந்தது.



அதில் திடீரென்று தீப்பற்றி எரிய ஆரம்பித்ததால் அப்பகுதியே புகைமூட்டமாக காட்சியளித்தது. இதனால், அப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகினர்.



தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறை வீரர்கள் தண்ணீரை பீச்சு அடித்து பற்றியெரிந்த தீயை அணைத்தனர்.

இதனால் தீயால் ஏற்படவிருந்த பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. சமூக விரோத கும்பல் புகைபிடித்து விட்டு நெருப்புடன் பீடி சிகரட்டை குப்பையில் போடுவதாலும், சிலர் வேண்டுமென்றே குப்பைமேடுகளில் தீ பற்ற வைப்பதாலும் இது போன்ற விபத்துகள் நடக்கின்றன.



முறையாக குப்பைகளை அப்புறப்படுத்துவதும், சுகாதாரத்தை பேணி பாதுகாப்பதும் அவசியம் என்ற அடிப்படையில் மாநகராட்சி கூடுதலாக கவனம் செலுத்தி கோடை காலத்தில் தீவிபத்துகள் ஏற்படும் முன்னே குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Newsletter

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...