கோவையில் குப்பைமேட்டில் திடீர் தீவிபத்து - மாநகராட்சிக்கு பொதுமக்கள் கோரிக்கை

கோவை செங்காளியப்பன் நகர் பகுதியில் உள்ள குப்பை மேட்டில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தால் அப்பகுதியே புகைமூட்டமாக காட்சியளித்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறை வீரர்கள் தண்ணீரை பீச்சு அடித்து பற்றியெரிந்த தீயை அணைத்தனர்.



கோவை: கோவை அடுத்த செங்காளியப்பன் நகர் பகுதியில் ரயில்வே பிரிட்ஜ் அருகாமையில் குப்பைமேடு ஒன்று இருந்தது.



அதில் திடீரென்று தீப்பற்றி எரிய ஆரம்பித்ததால் அப்பகுதியே புகைமூட்டமாக காட்சியளித்தது. இதனால், அப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகினர்.



தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறை வீரர்கள் தண்ணீரை பீச்சு அடித்து பற்றியெரிந்த தீயை அணைத்தனர்.

இதனால் தீயால் ஏற்படவிருந்த பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. சமூக விரோத கும்பல் புகைபிடித்து விட்டு நெருப்புடன் பீடி சிகரட்டை குப்பையில் போடுவதாலும், சிலர் வேண்டுமென்றே குப்பைமேடுகளில் தீ பற்ற வைப்பதாலும் இது போன்ற விபத்துகள் நடக்கின்றன.



முறையாக குப்பைகளை அப்புறப்படுத்துவதும், சுகாதாரத்தை பேணி பாதுகாப்பதும் அவசியம் என்ற அடிப்படையில் மாநகராட்சி கூடுதலாக கவனம் செலுத்தி கோடை காலத்தில் தீவிபத்துகள் ஏற்படும் முன்னே குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...