கோவையில் கத்தியை காட்டி காவலாளியிடம் வழிப்பறி - இளைஞர் கைது

கோவை கணபதி பகுதியில் தனியார் நிறுவனத்தில் காவலாளியான பணிபுரிந்து வரும் சாமிநாதன் என்பவரை கத்தியை காட்டி மிரட்டி 500 பணத்தை பறித்துவிட்டு தப்பிச் சென்ற ஆதித்யன் என்பவரை சரவணம்பட்டி போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவை கணபதி பகுதியில் வசிப்பவர் சாமிநாதன் (வயது52). முதியவரான சாமிநாதன் கடந்த 13 வருடங்களாக அதே பகுதியில் செக்யூரிட்டியாக வேலை செய்து வருகின்றார். இந்த நிலையில் தனது பணியை முடித்துவிட்டு விநாயகர் கார்டன் பகுதி வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு வந்த ஒரு இளைஞர், அவரை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டியுள்ளார். முதியவர் தன்னிடம் பணம் இல்லை என்று தெரிவித்து இருக்கின்றார். ஆனால், அதனை பொருட்படுத்தாமல் தான் பதுக்கி வைத்திருந்த கத்தியை எடுத்த அந்த இளைஞர் முதியவரை மிரட்டி 500 ரூபாய் பணத்தை பறித்து விட்டு தப்பி ஓடியுள்ளார்.

இதுகுறித்து செக்யூரிட்டி சாமிநாதன் சரவணம்பட்டி போலீசில் புகார் தந்திருக்கின்றார். சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், ஆதித்யன் என்ற இளைஞர் இந்த வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து, கத்தியை காட்டி செக்யூரிட்டியிடம் பணம் பறித்த அந்த நபரை, போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

Newsletter

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...

துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்...

புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனத்தில் விநாயகருக்கு ராஜ அலங்காரம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனம் மற்றும் இரண்டு டன் மலர்களால் ரா...

வரசித்தி விநாயகருக்கு வெள்ளி கவசம் - ரூ.10 லட்சம் நோட்டுகளால் அலங்காரம்

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயக பெருமானுக்கு வெ...

பர்மிட் தாமதம், கட்டண குழப்பம்: அமைச்சர் மீது ஆம்னி உரிமையாளர்கள் சாடல்

ஆம்னி பேருந்து அதிக கட்டண வசூல் குற்றச்சாட்டு தொடர்பாக அமைச்சர் இன்றுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை என உரிமையாளர் சங்கம்...