கோவையில் கத்தியை காட்டி காவலாளியிடம் வழிப்பறி - இளைஞர் கைது

கோவை கணபதி பகுதியில் தனியார் நிறுவனத்தில் காவலாளியான பணிபுரிந்து வரும் சாமிநாதன் என்பவரை கத்தியை காட்டி மிரட்டி 500 பணத்தை பறித்துவிட்டு தப்பிச் சென்ற ஆதித்யன் என்பவரை சரவணம்பட்டி போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவை கணபதி பகுதியில் வசிப்பவர் சாமிநாதன் (வயது52). முதியவரான சாமிநாதன் கடந்த 13 வருடங்களாக அதே பகுதியில் செக்யூரிட்டியாக வேலை செய்து வருகின்றார். இந்த நிலையில் தனது பணியை முடித்துவிட்டு விநாயகர் கார்டன் பகுதி வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு வந்த ஒரு இளைஞர், அவரை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டியுள்ளார். முதியவர் தன்னிடம் பணம் இல்லை என்று தெரிவித்து இருக்கின்றார். ஆனால், அதனை பொருட்படுத்தாமல் தான் பதுக்கி வைத்திருந்த கத்தியை எடுத்த அந்த இளைஞர் முதியவரை மிரட்டி 500 ரூபாய் பணத்தை பறித்து விட்டு தப்பி ஓடியுள்ளார்.

இதுகுறித்து செக்யூரிட்டி சாமிநாதன் சரவணம்பட்டி போலீசில் புகார் தந்திருக்கின்றார். சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், ஆதித்யன் என்ற இளைஞர் இந்த வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து, கத்தியை காட்டி செக்யூரிட்டியிடம் பணம் பறித்த அந்த நபரை, போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...