கோவையில் கத்தியை காட்டி காவலாளியிடம் வழிப்பறி - இளைஞர் கைது

கோவை கணபதி பகுதியில் தனியார் நிறுவனத்தில் காவலாளியான பணிபுரிந்து வரும் சாமிநாதன் என்பவரை கத்தியை காட்டி மிரட்டி 500 பணத்தை பறித்துவிட்டு தப்பிச் சென்ற ஆதித்யன் என்பவரை சரவணம்பட்டி போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவை கணபதி பகுதியில் வசிப்பவர் சாமிநாதன் (வயது52). முதியவரான சாமிநாதன் கடந்த 13 வருடங்களாக அதே பகுதியில் செக்யூரிட்டியாக வேலை செய்து வருகின்றார். இந்த நிலையில் தனது பணியை முடித்துவிட்டு விநாயகர் கார்டன் பகுதி வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு வந்த ஒரு இளைஞர், அவரை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டியுள்ளார். முதியவர் தன்னிடம் பணம் இல்லை என்று தெரிவித்து இருக்கின்றார். ஆனால், அதனை பொருட்படுத்தாமல் தான் பதுக்கி வைத்திருந்த கத்தியை எடுத்த அந்த இளைஞர் முதியவரை மிரட்டி 500 ரூபாய் பணத்தை பறித்து விட்டு தப்பி ஓடியுள்ளார்.

இதுகுறித்து செக்யூரிட்டி சாமிநாதன் சரவணம்பட்டி போலீசில் புகார் தந்திருக்கின்றார். சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், ஆதித்யன் என்ற இளைஞர் இந்த வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து, கத்தியை காட்டி செக்யூரிட்டியிடம் பணம் பறித்த அந்த நபரை, போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...