மேட்டுப்பாளையம் அருகே பைக் மின் கம்பத்தில் மோதியதில் வாலிபர் பலி

மேட்டுப்பாளையம் அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மின்கம்பத்தில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் சிவக்குமார் எனும் இளைஞர் சம்பவ இடத்தில் பலியானார். அவருடன் வந்த நண்பர் அஜித்குமார் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.


கோவை: கோவை மேட்டுப்பாளையம் அருகே சாலையோர மின்கம்பத்தில் இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞர் பலியானார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை சித்தன் குட்டை பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார்(45). இவருக்கு நித்திய பிரியா (30) என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர். இவரும் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த அஜீத்குமார்(26) என்பவரும் உறவினர்கள்.

இருவரும் திருப்பூரில் உள்ள நிறுவனத்தில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று திருப்பூரிலிருந்து சிவக்குமாரை சித்தன்குட்டையில் விடுவதற்காக அஜீத்குமார் தனக்குச் சொந்தமான இருசக்கர வாகனத்தில் இரும்பறை - பெத்திக்குட்டை சாலையில் சென்றார்.

அப்போது நிலைதடுமாறிய இரு சக்கர வாகனம் சாலையோர மின்கம்பத்தில் மோதியதில் சிவக்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும், அஜித்குமார் லேசான காயம் அடைந்தார். இச்சம்பவம் குறித்து அறிந்த சிறுமுகை போலீசார், விரைந்து சென்று விபத்தில் பலியான சிவகுமாரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...