உடுமலை அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கத்தைக் கண்டித்து விவசாயிகள் போராட்டம்

உடுமலை அருகே விருகல்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட பயிர் கடன்களுக்குப் பணத்தை திருப்பி செலுத்தியும், செலுத்தப்பட்ட தொகைக்கு உரிய ரசீது கொடுக்காததைக் கண்டித்து விவசாயிகள் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் உடுமலை அருகே, தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கத்தை கண்டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த குடிமங்கலம் ஒன்றியம் விருகல்பட்டி புதூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கம் செயல்பட்டு வருகிறது. விருகல்பட்டி புதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பழையூர், விருகல்பட்டி புதூர், மரிக்கந்தை, வல்லகுன்டாபுரம் உள்ளிட்ட கிராம விவசாயிகள் பயன் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக விவசாயிகளுக்குப் பயிர் கடன் வழங்காமல் இழுபறி நீடிப்பதாகவும் முறைகேடு நடந்ததாகவும் விவசாயிகள் புகார் தெரிவித்து வந்தனர். விருகல்பட்டி புதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விசாரணை நடத்த அலுவலர் நியமித்து கூட்டுறவுத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. விவசாயிகள் 40-க்கும் மேற்பட்டோர் விவசாயிகள் கூட்டுறவு சங்கத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட பயிர் கடன்களுக்குப் பணத்தைத் திருப்பி செலுத்தியும் செலுத்தப்பட்ட தொகைக்கு உரிய ரசீது கொடுக்கப்படவில்லை. இதனால் புதிதாகப் பயிர் கடன் வாங்க முடியாமல் உள்ளது. விவசாயிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு ரசீது வழங்காமல் முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக கூறி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டோம். எனவே முறைகேடு செய்தவர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரியப் பணத்தைத் திருப்பித் தர வேண்டும் என்றார்.

பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த குடிமங்கலம் காவல்துறையினர் உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் இரு தரப்பையும் வைத்து அமைதி பேச்சுவார்த்தை நடத்திய பின் அனைவருக்கும் பயிர் கடன் தள்ளுபடி வழங்கப்படும் எனக் கூறியதன் பேரில் தற்காலிகமாகப் போராட்டம் கைவிடப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...