உடுமலை அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கத்தைக் கண்டித்து விவசாயிகள் போராட்டம்

உடுமலை அருகே விருகல்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட பயிர் கடன்களுக்குப் பணத்தை திருப்பி செலுத்தியும், செலுத்தப்பட்ட தொகைக்கு உரிய ரசீது கொடுக்காததைக் கண்டித்து விவசாயிகள் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் உடுமலை அருகே, தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கத்தை கண்டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த குடிமங்கலம் ஒன்றியம் விருகல்பட்டி புதூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கம் செயல்பட்டு வருகிறது. விருகல்பட்டி புதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பழையூர், விருகல்பட்டி புதூர், மரிக்கந்தை, வல்லகுன்டாபுரம் உள்ளிட்ட கிராம விவசாயிகள் பயன் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக விவசாயிகளுக்குப் பயிர் கடன் வழங்காமல் இழுபறி நீடிப்பதாகவும் முறைகேடு நடந்ததாகவும் விவசாயிகள் புகார் தெரிவித்து வந்தனர். விருகல்பட்டி புதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விசாரணை நடத்த அலுவலர் நியமித்து கூட்டுறவுத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. விவசாயிகள் 40-க்கும் மேற்பட்டோர் விவசாயிகள் கூட்டுறவு சங்கத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட பயிர் கடன்களுக்குப் பணத்தைத் திருப்பி செலுத்தியும் செலுத்தப்பட்ட தொகைக்கு உரிய ரசீது கொடுக்கப்படவில்லை. இதனால் புதிதாகப் பயிர் கடன் வாங்க முடியாமல் உள்ளது. விவசாயிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு ரசீது வழங்காமல் முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக கூறி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டோம். எனவே முறைகேடு செய்தவர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரியப் பணத்தைத் திருப்பித் தர வேண்டும் என்றார்.

பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த குடிமங்கலம் காவல்துறையினர் உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் இரு தரப்பையும் வைத்து அமைதி பேச்சுவார்த்தை நடத்திய பின் அனைவருக்கும் பயிர் கடன் தள்ளுபடி வழங்கப்படும் எனக் கூறியதன் பேரில் தற்காலிகமாகப் போராட்டம் கைவிடப்பட்டது.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...