பல்லடத்தில் எலக்ட்ரிக்கல் கடையின் மேற்கூரையை உடைத்து கொள்ளை

பல்லடம் பனப்பாளையத்தில் எலக்ட்ரிக்கல் கடையின் மேற்கூரையை உடைத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை மர்மநபர்கள் திருடி சென்றனர். புகாரின் பேரில் போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


திருப்பூர்: பல்லடம் பனப்பாளையத்தில் எலக்ட்ரிக்கல் கடையின் மேற்கூரையை உடைத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை மர்மநபர்கள் திருடி சென்றனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் ரத்தினசாமி. இவர் பல்லடம் பணப்பாளையத்தில் விக்னேஷ் எலக்ட்ரிகல்ஸ் என்ற எலக்ட்ரிக்கல் கடையை நடத்தி வருகிறார்.

நேற்று காலை வழக்கம் போல கடைக்குச் சென்ற ரத்தினசாமி கடையை திறந்த போது கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்நிலையில் கடையிலிருந்த 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மின் வயர்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.



இச்சம்பவம் குறித்து ரத்தினசாமி பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் கடைக்கு வந்த போலீசார் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, மர்மநபர் ஒருவர் கடையின் மேற்கூரையை உடைத்து கடைக்குள் இறங்கி வயர்களை திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. சிசிடிவி காட்சிகளை வைத்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...