உடுமலை அருகே தென்னை மரங்களில் குருத்து அழுகல் நோய் பாதிப்பு - வேளாண் குழுவினர் தகவல்

உடுமலை சுற்றுவட்டார பகுதியில் தென்னை மரங்களில் மர்ம நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளதாக, இதனை தடுக்ககோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று ஆய்வு மேற்கொண்ட வேளாண் துறையினர், அப்பகுதியில் குருத்து அழுகல் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் தென்னை மரங்களில் குருத்து அழுகல் நோய் ஏற்பட்டுள்ளது என வேளாண் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் தென்னை விவசாயத்தை நம்பி உள்ளனர். மேலும் இதனை வாழ்வாதாரமாக நம்பி பல்வேறு கூலி தொழிலாளர்களும் வாழ்ந்து வருகின்றனர்.



இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடுமலை பகுதிகளில் கேரள வாடல் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக கூறி ஏராளமான தென்னை மரங்களை விவசாயிகள் வெட்டியதாக கூறப்படுகிறது. இதனிடையே இது மற்ற தென்னை மரங்களுக்கும் பரவாமல் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.



இது குறித்து வட்டார வேளாண் துறை உதவி இயக்குனர் தேவி, வேளாண் உதவி இயக்குனர் மார்க்கண்டேயன், வைரமுத்து, பொங்கலூர் வேளாண் அறிவியல்நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் இளையராஜா, பயிர் பாதுகாப்பு துறை இணை பேராசிரியர் கலையரசன்ஆகியோர் கொண்ட குழுவினர் ராவணபுரம், மொடக்குப்பட்டி பகுதிகளில் தென்னந்தோப்புகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்நிலையில், ஆய்விற்கு பின்னர் வேளாண் குழுவினர் கூறியதாவது,

இப்பகுதியில் கேரளா வாடல் நோய் பாதிப்பு இல்லை. குருத்து அழுகல் நோய் சில மரங்களில் காணப்படுகிறது. இதற்கு காப்பர் ஆக்சைடு குளோரைடு எனும் பூஞ்சான கொல்லியை ஒரு லிட்டர் தண்ணீரை மூன்று கிராம் வீதம் கலந்து குருத்துப் பகுதியில் ஊற்ற வேண்டும்.

15 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை ஊற்றி கட்டுப்படுத்த வேண்டும். தென்னை மரங்களை வளப்படுத்த ஒரு கிலோ யூரியா இரண்டு கிலோ சூப்பர் 3.5 கிலோ பொட்டாஷ், 40 கிராம் போரக்ஸ் 500 கிராம் மெக்னிசியம் சல்பேட் ஒரு கிலோஜிப்சம் 5 கிலோ வேப்பம் புண்ணாக்கு 50 கிலோ மக்கிய தொழு உரம் 500 கிராம் தென்னை மின்னோட்டம் ஆகியவற்றை ஆண்டுக்கு இருமுறை பிரித்துமே மற்றும் நவம்பர் மாதங்களில் ஊற்ற வேண்டும்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...