தேசிய அறிவியல் தினம்: கோவை வேளாண் பல்கலையில் சிறப்பு அறிவியல் கருத்தரங்கு

தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு கோவை வேளாண் பல்கலையில் ‘உலகளாவிய நல்வாழ்வுக்கான உலகளாவிய அறிவியல்’நடைபெற்ற கருத்தரங்கில், புதுடெல்லி இயற்கை வள மேலாண்மை இயக்குனரக உதவி இயக்குனர் வேல்முருகன் கலந்து கொண்டார்.


கோவை: தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்தியாவின் சிறந்த இயற்பியல் மேதையாக விளங்கிய சர்.சி.வி.ராமன் நோபல் பரிசு பெற்ற ராமன் விளைவு (Raman Effect) ஆராய்ச்சி முடிவை வெளியிட்ட பிப்ரவரி 28ம் தேதியை தேசிய அறிவியல் தினமாக இந்திய அரசு பிரகடனப்படுத்தியது.

அதன்படி இன்றைய தினம் இந்தியா முழுவதும் தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில், நாட்டின் பல்வேறு இடங்களில் அறிவியல் சார்ந்த விஷயங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவது வழக்கம்.



அதன் ஒரு பகுதியாக தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் அண்ணா அரங்கில் "உலகளாவிய நல்வாழ்வுக்கான உலகளாவிய அறிவியல்" எனும் தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது.



பல்கலைக்கழகத்தின் தாவர மூலக்கூறு மற்றும் உயிர் தொழில்நுட்ப மைய இயக்குனர் முனைவர் செந்தில் நடேசன், வேளாண்மை முதன்மையர் முனைவர் வெங்கடேச பழனிச்சாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் புதுடெல்லி இயற்கை வள மேலாண்மை இயக்குனரகத்தின் உதவி இயக்குனர் முனைவர் வேல்முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.



மேலும் அண்ணா அரங்கில் காட்சிபடுத்தப்பட்டு இருந்த பல்வேறு பள்ளி மாணவர்களின் அறிவியல் படைப்புகளை பார்வையிட்டார். இதில் தொழில்நுட்பம் சார்ந்த அறிவியல் படைப்புகள், இயற்கை பாதுகாப்பு சார்ந்த அறிவியல் படைப்புகளை பள்ளி மாணவர்கள் காட்சிப்படுத்தி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...