தாராபுரத்தில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் தாலி பறிப்பு - துணிகர திருடனுக்கு போலீஸ் வலை

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த மளிகை கடை உரிமையாளரின் மனைவி நந்தினி கழுத்தில் இருந்த ரூ 2.70 லட்சம் மதிப்புள்ள தங்க தாலியை மர்ம நபர் பறித்துச்சென்ற சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அலங்கியம் செல்லும் சாலையில் ராம் நகரில் மளிகைக்கடை வைத்து நடத்தி வருபவர் ராஜா (வயது38). இவரது மனைவி நந்தினி (வயது28). நேற்று இரவு மளிகை கடையில் வியாபாரம் முடித்துவிட்டு கடையின் அருகிலேயே புதிதாக கட்டிய ராஜாவின் வீட்டில் கணவன் மனைவி இருவரும் உறங்கிக் கொண்டிருந்தனர்.



நள்ளிரவில் வீட்டின் வெளிப்பக்க கதவின் பூட்டை உடைத்த மர்ம நபர், கதவின் கண்ணாடி கிரில் வழியாக கையை உள்ளே நுழைத்து சோபா கம்பெனியின் மீது வைக்கப்பட்டிருந்த வீட்டு கதவின் சாவியை எடுத்து கதவை திறந்து உள்ளே நுழைந்து அனைத்து அறைகளிலும் தேடியுள்ளார். அங்கு எந்த பொருளும் கிடைக்காத நிலையில், உறங்கிக் கொண்டிருந்த நந்தினியின் கழுத்தில் அணிந்திருந்த ஆறரை சவரன் தங்கத் தாலி கொடியை பறித்துக் கொண்டு தப்பியோடியுள்ளார்.

திடுக்கிட்டு விழித்து எழுந்த நந்தினி, திருடனை பார்த்து அலறி கூச்சலிட்டார். அதற்குள் காம்பவுண்ட் சுவரை தாண்டி குதித்து மர்ம நபர் தப்பி ஓடி தலைமறைவானார். நட்ட நடு இரவில் வீடு புகுந்து வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த நந்தினியின் கழுத்தில் இருந்த தங்கத் தாலி கொடியை பறித்துச் சென்ற துணிகர சம்பவம் தாராபுரம் பகுதியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

கொள்ளைபோன தாலிக்கொடியின் மதிப்பு ரூ 2 லட்சத்து 70 ஆயிரம் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த தாராபுரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் தனராஜ் தலைமையில் காவல் ஆய்வாளர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு, தப்பியோடிய திருடனை வலைவீசித் தேடிவருகின்றனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...