உடுமலை மத்திய பேருந்து நிலையத்தில் அதிகரித்துள்ள ஆக்கிரமிப்பு - பயணிகள் அவதி!

உடுமலை மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள நடைபாதை மற்றும் பயணிகள் அமரும் இடங்களை சிலர் ஆக்கிரமிப்பு செய்து கடைகள் அமைத்துள்ளதால் பயணிகள் அமர்வதற்கு இடமின்றி அவதிக்குள்ளாகி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.


திருப்பூர்: உடுமலை மத்திய பேருந்து நிலையத்தில் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்பால் சிரமம் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையத்துக்கு தினசரி நூற்றுக்கணக்கான பேருந்துகள் வந்து செல்கின்றன. சுற்றுவட்டார கிராமங்களுக்கும், பழநி, பொள்ளாச்சி, திருப்பூர், தாராபுரம், பல்லடம் மற்றும் தென் மாவட்டங்களுக்கும் உடுமலை வழியாகப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதேபோல் தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் உடுமலை பேருந்து நிலையத்துக்கு வருகின்றனர். பேருந்து நிலையத்தில் 5 வழிகள் உள்ளன. இங்குள்ள வணிக வளாகத்தில், பயணிகள் அமரும் இடத்தை பலர் ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ளனர். இதனால் பயணிகள் ஒதுங்க இடமின்றி சிரமப்படுகின்றனர்.

தட்டிக்கேட்கும் பயணிகளை கடைக்காரர்கள் மிரட்டி வருகின்றனர். எனவே, பயணிகளுக்கு இடையூறாக செயல்படும் கடைக்காரர்கள் மீது நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனப் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கொட்டாப்புளிபாளையம் கிராமத்தில் கதவு உடைத்து திருட முயன்ற முகமூடி திருடர்கள் தப்பியோட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கொட்டாப்புளிபாளையம் கிராமத்தில் நேற்று மாலை 7 மணியளவில் நாச்சிமுத்து வீட்டின் முன்பக...

காங்கேயம் பாப்பினியில் ரூ.2.5 லட்சம் மதிப்பிலான 19 ஆடுகள் திருட்டு; விவசாயிகள் மத்தியில் அச்சம்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பாப்பினியில் விவசாயி பொன்னுசாமியின் தோட்டத்தில் இருந்து நள்ளிரவில் மர்ம நபர்கள் 19 ஆடுகளை...

தாராபுரம் அருகே குடிபோதையில் அண்ணன்-தம்பி மோதல்: அருவாள் தாக்குதலில் அண்ணன் படுகாயம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தம்பி சேனாதிபதி அண்ணன் சந்திரசேகரை அருவாளால் வெட்டிய ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...