கோவை வடக்குமண்டலத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில் வடக்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில்‌ நடைபெற்று வரும்‌ தூய்மைப்‌ பணிகள்‌ மற்றும்‌ மேற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில்‌ நடைபெற்று வரும்‌ வளர்ச்சித்‌ திட்டப் பணிகளை மாநகராட்சி ஆணையர்‌ மு.பிரதாப்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


கோவை: மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகளை மாநகராட்சி ஆணையர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.25-க்குட்பட்ட காவலா்‌ குடியிருப்பு, காந்தி மாநகர் பகுதியில்‌ மாநகராட்சி தூய்மைப்பணியாளா்கள்‌ மக்கும்‌ குப்பை மற்றும்‌ மக்காத குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்கும்‌ பணிகளில்‌ ஈடுபட்டு வருவதை மாநகராட்சி ஆணையர்‌ மு.பிரதாப்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்து, பொதுமக்களிடம்‌ குப்பைகளை மக்கும்‌ குப்பை, மக்கா குப்பைகள்‌ என வகைப்படுத்தி தரம் பிரித்துக் கொடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டுமென தூய்மைப் பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்‌.

அதனைத்‌ தொடர்ந்து, வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.25-க்குட்பட்ட காவலா் குடியிருப்பு, காந்தி மாநகர்‌ பகுதியில்‌ டெங்கு கொசு ஒழிப்பு பணிகள்‌ குறித்து பணியாளர்களிடம்‌ கேட்டறிந்த மாநகராட்சி ஆணையர், கொசு ஒழிப்பு பதிவேடுகளை ஆய்வு செய்து, அவர்களுக்கான அறிவுரைகளை வழங்கிய பின்னர்‌, அப்பகுதியில்‌ குடிநீர்‌ விநியோகம்‌ முறையாக உள்ளதா? என ஆய்வு செய்து, அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம்‌ குறைகளைக்‌ கேட்டறிந்தார்‌.

பின்னர்‌ மேற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.34-க்குட்பட்ட கவுண்டம்பாளையம்‌, ஜீவா நகரில்‌ ரூ.5.20 கோடி மதிப்பீட்டில்‌ 1,680 மீட்டர் தொலைவிற்கு மழைநீர்‌ வடிகால்‌ கட்டுதல் மற்றும் சிறுபாலங்கள் கட்டுதல், ரூ.1.08 கோடி மதிப்பீட்டில் 850மீட்டருக்கு தொலைவிற்குத் தார் சாலை அமையவுள்ள இடத்தை மாநகராட்சி ஆணையர் நேரில் பார்வையிட்டு, அவ்விடத்திலுள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி விரைவாகச் செய்து முடிக்கச் சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு உத்தரவிட்டார்.



அதனைத்தொடர்ந்து வார்டு எண்.71-க்கு ஆர்எஸ்புரம் திருவேங்கடசாமி சாலையில் IDUM திட்டத்தின்கீழ் ரூ.37லட்சம் மதிப்பீட்டில், 2300மீட்டர் தொலைவிற்கு மழைநீர் வடிகால் கட்டும் பணிகளை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர், மழைநீர் வடிகால் மேல் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றச் சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்.



பின்னர்‌, மேற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்‌.72-க்குட்பட்ட ஆர்‌.எஸ்‌.புரம்‌, சுப்ரமணியம்‌ சாலையில்‌ உள்ள மாதிரி பள்ளியில்‌ நமக்கு நாமே திட்டத்தின்கீழ்‌ ரூ.110.50 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ கூடுதல்‌ ஆய்வுக்கூடங்கள்‌, ஸ்மார்ட்‌ வகுப்பறை மற்றும்‌ மாணவியர்‌ தங்கும்‌ விடுதி ஆகிய கட்டிடங்களின்‌ கட்டுமானப் பணியினை நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைவாகவும்‌, தரமாகவும்‌ செய்து முடித்து பயன்பாட்டிற்குக் கொண்டுவரச் சம்மந்தப்பட்ட பொறியாளருக்கு அறிவுறுத்திய பின்பு, வார்டு எண்‌.72-க்குட்பட்ட பூ மார்க்கெட்‌ பகுதியில்‌ ரூ.120 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ புனரமைக்கப்பட்டு வரும்‌ இடங்களை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.



இந்த ஆய்வுகளின்போது, மேற்கு மண்டல தலைவர்‌ தெய்வயானை தமிழ்மறை, மாமன்ற உறுப்பினர்‌ தவமணி பழனியப்பன்‌, உதவி ஆணையர்‌ சேகர்‌, உதவி செயற்பொறியாளர்கள்‌ செந்தில்பாஸ்கர்‌, கருப்பசாமி, உதவி நகரமைப்பு அலுவலர்கள்‌ (பொ)விமலா, கலாவதி, சுகாதார அலுவலர்‌ ராதாகிருஷ்ணன்‌, உதவி பொறியாளர்கள்‌ இளங்கோ, நாசர்‌, ஜீவராஜ்‌, ஹரிபிரசாத்‌, கமலக்கண்ணன்‌ சுகாதார ஆய்வாளர்கள்‌ விஜயகுமார்‌, சந்திரன்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...