ரேஷன் கடைகளை சீரமைக்க முன்வாருங்கள்..! - தொண்டு நிறுவனங்களுக்கு நீலகிரி ஆட்சியர் அழைப்பு!

நீலகிரி மாவட்டத்தில் பழுதடைந்த நிலையில் உள்ள 403 ரேஷன் கடைகளை சீரமைக்க தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் தெரிவித்துள்ளார்.


நீலகிரி: பழுதடைந்த நிலையில் உள்ள ரேஷன் கடைகளை சீரமைக்க தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முன்வர வேண்டும் என மாவட்ட கலெக்டர் அம்ரித் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நீலகிரி மாவட்டத்தில் 403 ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ரேஷன் கடைகள், கூட்டுறவு நிறுவனம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், சுய உதவி குழுக்கள், எஸ்டேட் நிறுவனத்தினர் ஆகியோரோல் நடத்தப்படுகிறது.

இவற்றில் பழுதடைந்து காணப்படும் ரேஷன் கடைகளை சீரமைப்பது தொடர்பாக தன்னார்வ தொண்டு நிறுவனங்களை அணுக முடிவு செய்யப்பட்டுள்ளது. கோத்தகிரியில் கோழிக்கரை, குஞ்சப்பனை, கொட்டக்கம்பை பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகள் டி.வி.எஸ் தன்னார்வ தொண்டு நிறுவனத்தாலும் செம்மனரை ரேஷன் கடை பர்ன்சைடு எஸ்டேட் நிர்வாகத்தாலும் சீரமைக்கப்பட்டுள்ளன.

கூடலூரில் ஸ்ரீமதுரை 1 மற்றும் 11 கொங்கர்மூலா, மண்வயல், குச்சி முச்சி, போஸ்பரா ஆகிய ரேஷன் கடைகள் டி.வி.எஸ் தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் சீரமைக்கப்பட்டுள்ளன. ஊட்டியில் பிங்கர் போஸ்ட் 1 மற்றும் 11, குன்னூர் வட்டத்தில் எடப்பள்ளி ரேஷன் கடை ஆகியவை நீலகிரி மாவட்ட எரிவாயு வினியோகஸ்தர் சங்கம் மூலம் சீரமைக்கப்பட்டு வருகின்றன.

இதேபோன்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள பழுதடைந்த ரேஷன் கடைகளை சீரமைக்க தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...