உடுமலை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் இலவச சித்த மருத்துவ முகாம்

உடுமலை தலைமை அஞ்சலக பணியாளர்களுக்கு, உடுமலை அரசு மருத்துவமனை சித்தா பிரிவு சார்பில், இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமை உடுமலை தலைமை அஞ்சலக அதிகாரி கீதா தொடங்கி வைத்தார்.


திருப்பூர்: உடுமலையில் அரசு மருத்துவமனை சித்தா பிரிவு சார்பில், இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தலைமை அஞ்சலக பணியாளர்களுக்காக உடுமலை அரசு மருத்துவமனை சித்தா பிரிவு சார்பில், இலவச சித்த மருத்துவ முகாம் நடந்தது. இந்த முகாமை உடுமலை தலைமை அஞ்சலக அதிகாரி கீதா தொடங்கி வைத்தார். உதவி அஞ்சலக அதிகாரி செல்வராஜன் முன்னிலை வகித்தார்.

இம்முகாமில், உடுமலை தலைமை அஞ்சலக பணியாளர்கள், சுற்றுப்பகுதியைச் சேர்ந்த, கிளை அஞ்சலகத்தைச் சேர்ந்த பணியாளர்கள், ஓய்வு பெற்ற பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பங்கேற்றனர்.

சித்த மருத்துவர்கள், கார்த்திகேயன், ஸ்ரீபப்பி, மருந்தாளுநர் பெனிலா, மருத்துவமனை பணியாளர் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட குழுவினர், சிகிச்சை மற்றும் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

முகாமிற்கான ஏற்பாடுகளை, அரசு மருத்துவ மனை சித்த மருத்துவ அலுவலர் லட்சுபதிராஜ், ஓய்வு பெற்ற அஞ்சலர் முகமது அலி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...