புத்தக வாசிப்பை ஏற்படுத்தும் 'புக்ஸ் ஆன் வீல்' ஆட்டோ நூலகம் - கோவையில் தொடக்கி வைத்தார் காவல் ஆணையர்!

கோவையில் கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப கல்லூரி உதவியுடன் ‘புக்ஸ் ஆன் வீல்’ என்ற தலைப்பில் கரும்புக்கடை மைதானத்தில் நடைபெற்ற விழாவில் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் 500 ஆட்டோ நூலகங்களை தொடங்கி வைத்தார்.



கோவை: கோவையில் வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்கும் வகையில் 500 ஆட்டோக்களில் அமைக்கப்பட்ட நூலகத்தை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

கோவையில் கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியின் பங்களிப்புடன் பொதுமக்களிடம் வாசிப்பு திறனை அதிகப்படுத்தும் வகையில் புக்ஸ் ஆன் வீல் (Books On Wheel)என்ற தலைப்பில் 500 ஆட்டோக்களில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.



கோவை சிங்காநல்லூர் கரும்புக்கடை மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டோ நூலகத்தின் திறப்பு விழாவில், கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு நூலகத்தை தொடங்கி வைத்தார்.



இந்த நிகழ்வில் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் பேசியதாவது,

இதுபோன்ற ஆட்டோ நூலகம் மற்றும் தெருமுனை நூலகங்களை இதற்கு முன்பும் திறந்து வைத்துள்ளேன். அதன் தொடர்ச்சியாக KIT பங்களிப்புடன் தற்போது மாநகரில் உள்ள 500 ஆட்டோக்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.

ஆட்டோவில் செல்லும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்வதோடு மட்டுமல்லாமல் ஆட்டோ ஓட்டுநர்களும் தங்களுடைய ஓய்வு நேரத்தில் இந்த புத்தகங்களை வாசித்து பயனடையும் விதமாக இது அமைந்துள்ளது.

ஆட்டோ ஓட்டுநருடன் காவல்துறை மற்றும் போக்குவரத்து காவல்துறை இணைந்து பல்வேறு விபத்து தடுப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றோம். இந்த உறவை பலப்படுத்த இது ஒரு புதிய முயற்சியாக எடுத்துள்ளோம்.

இது ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மனக்கவலையை குறைப்பதற்கு மட்டுமல்லாமல் பொதுமக்களிடம் வாசிப்பு பழக்கத்தை அதிகப்படுத்துவதற்கு உதவியாக இருக்கும். கோவை மாநகரில் மோசடி வழக்குகள் குறித்து FIR பதிவு செய்து வருகின்றோம். இதுகுறித்து அதிகப்படியான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

பத்திரிக்கை, ஊடகத்துறை, நண்பர்களும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இது சம்பந்தமான பல்வேறு செய்திகளை வெளியிட்டால் பொதுமக்கள் விழிப்புணர்வு அடைய உதவியாக இருக்கும். மோசடி வழக்குகளில் யாராவது ஏமாற்றப்பட்டு இருந்தால் உடனடியாக காவல்துறையை அணுகலாம் அவ்வாறு அணுகும் பட்சத்தில் உடனடியாக வழக்கு பதிவு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வரும் நபர்கள், போக்குவரத்து விதிகளை மீறும் இளைஞர்கள் என அனைவரையும் அழைத்து முறையான போக்குவரத்து விதிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...

கோவையில் SP வேலுமணியின் ஐந்தாவது முறை வெற்றிக்கு அண்ணாமலை வாழ்த்து

பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, கோவையில் உள்ள தனது இல்லத்தில் SP வேலுமணியை சந்தித்து, அவரது ஐந்த...

கோவை தெற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுணன் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை தெற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுணன் 63-வது வார்டு இராமநாதபுரம் மற்றும் ஒலாம்பஸ் பகுதிகளில் வீடு வீடா...