கோவையில் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்த காட்டு யானைகள் - பரபரப்பு

கோவை மருதமலை அருகே ஒரு குட்டியுடன் கூடிய 5 யானைகள் மற்றும் சின்னதடாகம் பகுதியிலும் காட்டு யானை ஒன்று குடியிருப்பு பகுதியில் புகுந்த நிலையில், ரோந்து பணியில் ஈடுபட்ட வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்கு விரட்டினர்.


கோவை: கோவை மாவட்டம் மருதமலை மற்றும் சின்னதடாகம் பகுதிகளில் நேற்றிரவு காட்டு யானைகள் புகுந்து வாழை மரங்களை சேதப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வரும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக வனத்துறையினர் இரவு பகலாக ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்றிரவு கெம்பனூர் முதல் கணுவாய் பகுதி வரை யானைகளின் நடமாட்டத்தை 4 பேர் கொண்ட வனத்துறை குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர்.



அப்போது, மருதமலை சுற்றுவட்டார பகுதியான லேபர்ஸ் காலனி அருகேயுள்ள குடியிருப்பு பகுதிக்குள் நள்ளிரவில் ஒரு குட்டியுடன் கூடிய 5 யானைகள் நுழைந்தது. இதனையறிந்த வனத்துறையினர், யானைகளை மருமலையின் அடிவாரத்தில் உள்ள வனப்பகுதிக்கு விரட்டினர்.

இதேபோல், காட்டு யானை ஒன்று சின்னதடாகம் அருகேயுள்ள வாத்தியார் தோட்டம் பகுதியில் நள்ளிரவில் வெளியேறி உலா வந்தது. இதனையறிந்த வனத்துறையினர், அதனை காப்புக்காடு வனப்பகுதிக்கு விரட்டினர்.

இந்நிலையில், வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் வெளியேறாத வண்ணம் வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...