இரட்டைக்குவளை முறையை தடுக்க வேண்டும்..! - கிணத்துக்கடவில் விசிக ஆர்ப்பாட்டம்

கிணத்துக்கடவு பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற விசிக கட்சியின் ஆர்ப்பாட்டத்தில், இரட்டை குவளை முறையை ஒழிக்கவும், பட்டியலின மக்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கவும் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.



கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே பட்டியலின மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கிணத்துக்கடவு வட்டார பகுதியில் வசிக்கும் பட்டியலின தாழ்த்தப்பட்ட ஏழை, எளிய மக்கள் வீட்டு மனை பட்டா கேட்டு விண்ணப்பித்துள்ளனர். ஆனால், இதுவரை அவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படவில்ல என கூறப்படுகிறது.



இந்நிலையில் வீட்டு மனை பட்டா வழங்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும், இரட்டைக் குவளை முறையை தடுத்து நிறுத்தவும், தென்னை சார்ந்த தொழில்காளர்களுக்கு நல வாரியம் அமைக்க வலியுறுத்தியும் கிணத்துக்கடவு பழைய பேருந்து நிலையம் முன்பு விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



கோவை மாவட்ட துணை செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, கோரிக்கையை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில், விசிகவின் மாநில துணை பொதுச் செயலாளர் கனியமுதன், மாவட்ட செயலாளர் சுசி கலையரசன், தெற்கு மாவட்ட செயலாளர்கள் பிரபு, சிவகாமி, விடுதலைச் செல்வன், முகமது அலி உள்ளிட்ட விடுதலை சிறுத்தை கட்சியைச் சேர்ந்த பலர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி: தவெக வேட்பாளர் கனிமொழி தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி தவெக வேட்பாளர் கனிமொழி நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் கடைகள், பெட்ரோல் பங்குகளுக்...

கோவை கழிவுநீர் தொட்டியில் விழுந்த இரு ஒப்பந்த ஊழியர்களை மீட்க தீவிர முயற்சி

கோவை சாய்பாபா காலனியில் கழிவுநீர் உந்து நிலையத்தில் மோட்டார் பழுது பார்க்க இறங்கிய இரு மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்கள் 40 அ...

SNR சன்ஸ் அறக்கட்டளை CEO C.V. ராம்குமாருக்கு மதிப்பு மிக்க தொழில் சேவை விருது

Rotary Club of Coimbatore Millennium மற்றும் Ramakrishna Matric Higher Secondary School Interact Club இணைந்து SNR சன்ஸ்...

கோவை-குவைத் இடையே நேரடி விமான சேவை ஏப்ரல் இறுதியில் தொடக்கம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து குவைத் நாட்டிற்கு Jazeera ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பில் ஏப்ரல் இறுதியில் நேரடி விமா...

கவுண்டம்பாளையம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக சூர்யா பிரகாஷ் அறிவிப்பு

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியின் கீழ் போட்டியிடும் காங்கிரஸ் க...

ஸ்ரீ இராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் பெங்களூருவில் மாபெரும் சந்திப்பு

பெங்களூரு மடிவாலாவில் SRIT Alumni Connect 2K26 நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. பல்வேறு துறைகள் மற்றும் ஆண்டுகளைச் சேர்ந்த 1...