இரட்டைக்குவளை முறையை தடுக்க வேண்டும்..! - கிணத்துக்கடவில் விசிக ஆர்ப்பாட்டம்

கிணத்துக்கடவு பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற விசிக கட்சியின் ஆர்ப்பாட்டத்தில், இரட்டை குவளை முறையை ஒழிக்கவும், பட்டியலின மக்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கவும் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.



கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே பட்டியலின மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கிணத்துக்கடவு வட்டார பகுதியில் வசிக்கும் பட்டியலின தாழ்த்தப்பட்ட ஏழை, எளிய மக்கள் வீட்டு மனை பட்டா கேட்டு விண்ணப்பித்துள்ளனர். ஆனால், இதுவரை அவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படவில்ல என கூறப்படுகிறது.



இந்நிலையில் வீட்டு மனை பட்டா வழங்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும், இரட்டைக் குவளை முறையை தடுத்து நிறுத்தவும், தென்னை சார்ந்த தொழில்காளர்களுக்கு நல வாரியம் அமைக்க வலியுறுத்தியும் கிணத்துக்கடவு பழைய பேருந்து நிலையம் முன்பு விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



கோவை மாவட்ட துணை செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, கோரிக்கையை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில், விசிகவின் மாநில துணை பொதுச் செயலாளர் கனியமுதன், மாவட்ட செயலாளர் சுசி கலையரசன், தெற்கு மாவட்ட செயலாளர்கள் பிரபு, சிவகாமி, விடுதலைச் செல்வன், முகமது அலி உள்ளிட்ட விடுதலை சிறுத்தை கட்சியைச் சேர்ந்த பலர் பங்கேற்றனர்.

Newsletter

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...