புற்றுநோயை குணப்படுத்தும் ஹைபர்தீமியா சிகிச்சை மையம் பொள்ளாச்சியில் துவக்கம்

புற்றுநோயை குணப்படுத்தும் ஹைபர்தீமியா சிகிச்சை மையம் கோவை பொள்ளாச்சியில் உள்ள மகாலிங்கம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் துவங்கப்பட்டு உள்ளது. இந்த மையத்தை முன்னாள் சிபிஐ இயக்குநர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.


கோவை: கோவை புற்றுநோயை குணப்படுத்தும் ஹைபர்தீமியா சிகிச்சை மையம் இந்தியாவில் முதல்முறையாக பொள்ளாச்சியில் துவங்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி - உடுமலை சாலையில் மகாலிங்கம் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரி வளாகத்தில் சுற்றுச்சூழல் அழிவுகளிலிருந்து மனித உடலையும், மனதையும் ஆரோக்கியமாக, இயற்கையாக குணப்படுத்தும் நோக்கத்துடன் மிராக்கிள் வெல்னஸ் என்ற நவீன தொழில்நுட்பத்துடன் புற்றுநோய் சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஜெர்மன், ஜப்பான் போன்ற நாடுகளில் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கும் மிராக்கிள் சிகிச்சை மையம் முதல்முறையாக இந்தியாவில் மகாலிங்கம் பொறியியல் தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் தொடங்கப்பட்டு உள்ளது.



இதனை முன்னாள் சிபிஐ இயக்குனர் கார்த்திகேயன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.



இந்த நிகழ்வுக்கு பின், சக்தி குழும நிறுவனங்களின் தலைவர் மாணிக்கம் செய்தியாளர்களிடம் பேசியதாவது, புற்றுநோய் என்பது தீராத கொடிய நோய் என்ற நிலையை மாற்றி ஒருங்கிணைந்த சிகிச்சை முறையை பின்பற்றுவதன் மூலம் அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டி கீமோ இல்லாத சிகிச்சை முறையை மிராக்கிள் கிளினிக் வழங்கி வருகிறது.



பயமில்லா நிலையை நோயாளிகளுக்கு புகட்டுவதன் முலம் அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி நோயாளிகளின் வாழ்நாள் நீட்டிக்கப்படுகிறது. இந்த ஹைபர்தீமியா சிகிச்சை முறை கதிர்வீச்சு மற்றும் கீமோதெரபி சிகிச்சையை விட மனித உயிர் வாழ்வில் 30 - 40 % வெற்றி விகிதத்தை தருகிறது.

புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு எந்த வித பக்கவிளைவுகளும் ஏற்படாத வகையில் இந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



ஜெர்மன், ஜப்பான், கனடா என உலகம் முழுவதும் 600 ஹைபர்தீமியா கருவிகள் உள்ளது. தற்போது இந்தியாவில் முதல் முறையாக பொள்ளாச்சியில் இந்த சிகிச்சை முறை துவங்கப்பட்டுள்ளது.

Newsletter

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...