தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக குஷ்பு நியமனம் - பிரதமர் மோடிக்கு குஷ்பு நன்றி!

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள குஷ்பு, பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார். பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, கோவை தெற்கு எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் குஷ்பு-வுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.



சென்னை: தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நடிகை குஷ்பு நியமிக்கப்பட்டுள்ளார்.

நடிகை குஷ்பு பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினராக பொறுப்பு வகித்து வருகிறார்.



இந்நிலையில், தற்போது, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பாஜகவினர் மற்றும் திரைத்துறையினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.



இதுதொடர்பாக குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில், பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், இவ்வளவு பெரிய பொறுப்பை எனக்கு வழங்கிய பிரதமர் மோடிக்கும், இந்திய அரசாங்கத்திற்கும் எனது நன்றிகள். பெண்களுக்கு எதிரான கொடுமைகளை தடுக்க என்னால் முடிந்ததை செய்வேன், என்று குறிப்பிட்டுள்ளார்.



பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பதிவில், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட குஷ்புவுக்கு தமிழக பாஜக சார்பில் வாழ்த்துகள். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமையை எதிர்த்து தொடர்ந்து போராடிய குஷ்புவுக்கு கிடைத்த அங்கீகாரம் என்று பாராட்டியுள்ளார்.



கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வும், பாஜக மகளிரணி தேசிய தலைவருமான வானதி சீனிவாசன் தனது டுவிட்டர் பதிவில், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள குஷ்புவுக்கு வாழ்த்துக்கள். நீங்கள் பெண்களின் நலன்களை ஊக்குவிப்பீர்கள், பாதுகாப்பீர்கள் மற்றும் இந்த பொறுப்பில் முக்கிய பங்கு வகிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். இந்த புதிய பொறுப்புக்கு எனது வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...