கோவை தடாகம் சாலை விரிவாக்க பணியை வேகப்படுத்துக..! - பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு

கோவை காந்திபார்க் முதல் கணுவாய் வரையிலான தடாகம் சாலை, நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி அடிக்கல் நாட்டி ஓராண்டு மேலாகியும் துவங்கப்படாமல் உள்ளதால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருவதாக ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.



கோவை: கோவை மாநகர பகுதியான காந்தி பார்க் முதல் கணுவாய் வரையிலான தடாகம் சாலையை நான்கு வழி சாலை அமைப்பதற்காக அடிக்கல் நாட்டப்பட்டு ஓர் ஆண்டு ஆகியுள்ளது.

இதற்கான பணிகள் இன்னும் துவங்கப்படாமல்இருப்பதாகவும், அதேபோல் அப்பகுதியில் குடிநீர் திட்டத்திற்கான குழாய் பதிக்கும் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு விபத்துக்களும் நிகழ்வதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.



இந்நிலையில், கோவை மாநகர சாலை பயனாளர்கள் சங்கத்தினர் சாலை ஓரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை விரிவாக்க பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



மேலும், ஜீவா நகர், கே கே புதூர் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை விரிவாக்க பணிகளை துரிதப்படுத்தி மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தினர்.



முன்னதாக, முன்னாள் மாமன்ற உறுப்பினர் புருஷோத்தமன் முன்னிலையில் மனு அளிக்க வந்த அச்சங்கத்தினர், கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...