கோவை தடாகம் சாலை விரிவாக்க பணியை வேகப்படுத்துக..! - பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு

கோவை காந்திபார்க் முதல் கணுவாய் வரையிலான தடாகம் சாலை, நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி அடிக்கல் நாட்டி ஓராண்டு மேலாகியும் துவங்கப்படாமல் உள்ளதால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருவதாக ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.



கோவை: கோவை மாநகர பகுதியான காந்தி பார்க் முதல் கணுவாய் வரையிலான தடாகம் சாலையை நான்கு வழி சாலை அமைப்பதற்காக அடிக்கல் நாட்டப்பட்டு ஓர் ஆண்டு ஆகியுள்ளது.

இதற்கான பணிகள் இன்னும் துவங்கப்படாமல்இருப்பதாகவும், அதேபோல் அப்பகுதியில் குடிநீர் திட்டத்திற்கான குழாய் பதிக்கும் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு விபத்துக்களும் நிகழ்வதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.



இந்நிலையில், கோவை மாநகர சாலை பயனாளர்கள் சங்கத்தினர் சாலை ஓரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை விரிவாக்க பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



மேலும், ஜீவா நகர், கே கே புதூர் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை விரிவாக்க பணிகளை துரிதப்படுத்தி மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தினர்.



முன்னதாக, முன்னாள் மாமன்ற உறுப்பினர் புருஷோத்தமன் முன்னிலையில் மனு அளிக்க வந்த அச்சங்கத்தினர், கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...