உடுமலையில் அமமுக சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம்

உடுமலை அருகே நடந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75 ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சண்முகவேலு, வரும் காலங்களில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மக்கள் ஆதரவுபெற்று ஆட்சி அமைக்கும் என்று எந்த சந்தேகமும் இல்லை என்று நம்பிக்கை தெரிவித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்தமடத்துக்குளம் பகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம், முன்னாள் அமைச்சரும், கட்சியின் கோவை மேற்கு ஒன்றிய பொறுப்பாளருமான சி.சண்முகவேலு தலைமையில் நடைபெற்றது.



பொதுக் கூட்டத்தில் சண்முகவேலு பேசுகையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தியுள்ளார். எம்ஜிஆர் கொண்டுவந்த அனைத்து திட்டங்களையும்விரிவுபடுத்தினார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை தற்போது திமுக அரசு செயல்படுத்தி வருகின்றது.



தாலிக்கு தங்கம் சத்துணவு திட்டம் உட்பட பல்வேறு திட்டங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. வரும் காலங்களில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மக்கள் ஆதரவுபெற்று ஆட்சி அமைக்கும் என்று எந்த சந்தேகமும் இல்லை என்றார்.

அமைப்புச் செயலாளரும் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழகச் செயலாளருமான தொட்டியம் ராஜசேகரன், முன்னாள் எம்.எல்.ஏ.பழனி குமணன், மணிகண்டன், பொன்னுசாமி, ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், பேரூர் கழகச் செயலாளர் தளபதி நடராஜ், உடுமலை நகர கழக செயலாளர் கே ஆர் பி பாஸ்கரன், பொதுக்குழு உறுப்பினர் ஸ்வீட் ஆனந்தன், உடுமலை நகரக் இணைச் செயலாளர் பனியன் துரை உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...