பல்லடத்தில் புதிய மின் மயானத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களை மிரட்டும் திமுக நகர செயலாளர்? - பொதுமக்கள் புகார்!

பல்லடம் அடுத்த பச்சாபாளையம் பகுதியில் புதிய நவீன மின் மயானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்களை பல்லடம் திமுக நகர செயலாளர் ராஜேந்திர குமார் மிரட்டுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் புதிய மின் மயானம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடுபவர்களை திமுக நகரச் செயலாளர் மிரட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பல்லடம் நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இந்த பகுதியில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் வசித்து வருகின்றனர். வளர்ந்து வரும் பல்லடம் நகரத்தில் மின் மயானம் இல்லாததால் இப்பகுதியை சேர்ந்தவர்கள் திருப்பூர், கொடுவாய் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வர வேண்டிய சூழ்நிலை உள்ளது.

இந்த நிலையில் பல்லடம் நகராட்சி கூட்டத்தில் 8 வது வார்டு பச்சாபளையத்தில், தமிழக அரசின் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1.45 கோடி மதிப்பில் நவீன எரியூட்டு மின் மயானம் அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதற்கு அப்பகுதியை சேர்ந்த ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்த நிலையில், மற்றொரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். நவீன எரியூட்டு மின் மயானம் குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைக்கப்பட்டால் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு பல்வேறு விதமான நோய் தொற்று ஏற்படும் என கருத்து தெரிவிக்கப்பட்டன.

இந்த மின் மயானம் அமைக்கப்படுவதற்கு அருகே 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில், அரசு பள்ளி உள்ளிட்டவை அமைந்துள்ளதாக கூறி தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி நவீன எரியூட்டு மின் மயானம் அமைப்பதற்கான பூமி பூஜை, கடந்த சில நாட்களுக்கு முன்பு நகராட்சி தலைவர் கவிதாமணி ராஜேந்திர குமார் தொடங்கி வைத்தார். இதனால் ஆத்திரமடைந்து, கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பச்சாபாளையத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் இன்று பொதுமக்கள் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.



இதில், கடந்த 9 மாதங்களாக மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவித்த அவர்கள், பணி தொடர்ந்து நடைபெற்றால் ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரும்ப ஒப்படைக்க போவதாக தெரிவித்தனர்.



மேலும் போராட்டங்களில் ஈடுபடுபவர்களை பல்லடம் திமுக நகரச் செயலாளர் ராஜேந்திர குமார் நகராட்சி அலுவலகத்திற்கு அழைத்து வந்து மிரட்டுவதாகவும் குற்றம்சாட்டினர்.

மேலும், நகராட்சி அலுவலகத்தில் நகர செயலாளருக்கு என்ன வேலை என கேள்வி எழுப்பிய பொதுமக்கள், மின்மயானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...