பல்லடத்தில் புதிய மின் மயானத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களை மிரட்டும் திமுக நகர செயலாளர்? - பொதுமக்கள் புகார்!

பல்லடம் அடுத்த பச்சாபாளையம் பகுதியில் புதிய நவீன மின் மயானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்களை பல்லடம் திமுக நகர செயலாளர் ராஜேந்திர குமார் மிரட்டுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் புதிய மின் மயானம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடுபவர்களை திமுக நகரச் செயலாளர் மிரட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பல்லடம் நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இந்த பகுதியில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் வசித்து வருகின்றனர். வளர்ந்து வரும் பல்லடம் நகரத்தில் மின் மயானம் இல்லாததால் இப்பகுதியை சேர்ந்தவர்கள் திருப்பூர், கொடுவாய் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வர வேண்டிய சூழ்நிலை உள்ளது.

இந்த நிலையில் பல்லடம் நகராட்சி கூட்டத்தில் 8 வது வார்டு பச்சாபளையத்தில், தமிழக அரசின் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1.45 கோடி மதிப்பில் நவீன எரியூட்டு மின் மயானம் அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதற்கு அப்பகுதியை சேர்ந்த ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்த நிலையில், மற்றொரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். நவீன எரியூட்டு மின் மயானம் குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைக்கப்பட்டால் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு பல்வேறு விதமான நோய் தொற்று ஏற்படும் என கருத்து தெரிவிக்கப்பட்டன.

இந்த மின் மயானம் அமைக்கப்படுவதற்கு அருகே 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில், அரசு பள்ளி உள்ளிட்டவை அமைந்துள்ளதாக கூறி தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி நவீன எரியூட்டு மின் மயானம் அமைப்பதற்கான பூமி பூஜை, கடந்த சில நாட்களுக்கு முன்பு நகராட்சி தலைவர் கவிதாமணி ராஜேந்திர குமார் தொடங்கி வைத்தார். இதனால் ஆத்திரமடைந்து, கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பச்சாபாளையத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் இன்று பொதுமக்கள் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.



இதில், கடந்த 9 மாதங்களாக மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவித்த அவர்கள், பணி தொடர்ந்து நடைபெற்றால் ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரும்ப ஒப்படைக்க போவதாக தெரிவித்தனர்.



மேலும் போராட்டங்களில் ஈடுபடுபவர்களை பல்லடம் திமுக நகரச் செயலாளர் ராஜேந்திர குமார் நகராட்சி அலுவலகத்திற்கு அழைத்து வந்து மிரட்டுவதாகவும் குற்றம்சாட்டினர்.

மேலும், நகராட்சி அலுவலகத்தில் நகர செயலாளருக்கு என்ன வேலை என கேள்வி எழுப்பிய பொதுமக்கள், மின்மயானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து...

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...