உடுமலையில் கூடுதல் நெல் உலர் களங்கள் அமைக்க வேண்டும் - அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை

உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் அறுவடை காலத்தில் உலர் கலங்கள் இல்லாததால் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவதால் அப்பகுதியில் கூடுதல் உலர் கலங்கள் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தல்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கூடுதல் நெல் உலர் களங்கள் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உடுமலை அமராவதி அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு அமராவதி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதில் குமரலிங்கம், கண்ணாடி புத்தூர், சோழமாதேவி, கணியூர், கடத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் 4,686 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

அணையிலிருந்து தண்ணீர் திறப்பை அடுத்து குறுகிய கால நெல் ரகங்கள் அங்கு சாகுபடி செய்யப்பட்டது. அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக நெல் சாகுபடி உள்ளது.



ஆனால், இப்பகுதியில் உலர் களங்கள் வசதி இல்லாத காரணத்தால் அறுவடை சீசனில் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் சீசன் சமயத்தில் பாலம் மற்றும் சாலைகளில் உலர வைக்க வேண்டிய நிலை உள்ளதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.



இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது, நெல் அறுவடை சீசன் சமயத்தில் போதிய உளர் களங்கள் இல்லாததால் மிகுந்த பாதிப்பு ஏற்படுகிறது. சிறு,குறு விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு நெல்லை, கொண்டு செல்ல வாகன செலவு அதிகரிப்பதால் தயக்கம் காட்டுகின்றனர்.

மேலும், ஈரப்பதத்தை காரணம் காட்டி வியாபாரிகள் விலை நிர்ணயிப்பதில் பாரபட்சம் காட்டுகின்றனர். சாலைகளில் காயவைக்கும்போது நெல்மணிகளின் தரம் பாதிக்கப்படுகிறது.

நெல் அதிகளவு சாகுபடியாகும் பகுதிகளில் சாகுபடி பரப்பை கணக்கிட்டு கூடுதலாக உலர் களங்கள் கட்ட மாவட்ட வேளாண்மை விற்பனை குழு வாயிலாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...