உடுமலையில் நாட்டு கோழிக்குஞ்சு பொரிப்பகத்தை திறக்க வேண்டும் - மலைவாழ் மக்கள் கோரிக்கை!

உடுமலை அருகே கடந்த 3 ஆண்டுகளாக செயல்படாமல் மூடப்பட்டு கிடக்கும் நாட்டு கோழிக்குஞ்சு பொரிப்பகத்தை மீண்டும் திறந்து செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மூடப்பட்டு கிடக்கும் நாட்டுக் கோழிக்குஞ்சு பொறிப்பகத்தை திறக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

உடுமலை அடுத்த குறிச்சிகோட்டை பகுதியில் கால்நடை துறை சார்பில் மேற்கு தொடர்ச்சி மலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கடந்த 2012-13ஆம் தேதி ஆண்டில் ரூ.30 லட்சம் செலவில் நாட்டு கோழி குஞ்சு பொரிப்பகம் அமைக்கப்பட்டது.

இங்கு, 2,000 முட்டைகளை அடைகாக்கும் இயந்திரம் நிறுவப்பட்டது. இதன் மூலம், ஆண்டுக்கு ஏழு தடவை 2,000 கோழி குஞ்சுகள் உற்பத்தி செய்ய முடியும் எனவும் திட்டமிடப்பட்டது.

குஞ்சுகளை ஒரு மாதம் வரை பராமரித்து இலவசமாகவும், ரூ.40 மற்றும் ரூ.20 என்ற திட்ட நிதி அடிப்படையில் மலைவாழ் மக்கள், சிறு குறு விவசாயிகள் மற்றும் கிராம மக்களுக்கு வழங்கப்பட்டது.



இந்த குஞ்சு பொரிப்பகம் தொடர்ந்து செயல்படுவதற்கு தொடர் செலவின நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதற்கான பணியாளர்களும் நியமிக்கப்படவில்லை. இதனால் கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த நாட்டு கோழிக்குஞ்சு பொரிப்பகம் பயன்பாடின்றி மூடி கிடக்கிறது.

கட்டிடமும் பாழடைந்து புதர் மண்டி கிடக்கிறது. எனவே அரசு உரிய நடவடிக்கை எடுத்து, நாட்டு கோழிக்குஞ்சு பொரிப்பகத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மனைவி கலைச்செல்வி நாம் தமிழர் கட்சியில் இணைவு

வால்பாறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமியின் மனைவி கலைச்செல்வி, அதிமுக சார்பில் சட்டப் பேரவை தேர்தலில் போட்டிய...

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...