வால்பாறை அருகே புல்மலை வனப்பகுதியில் காட்டுத்தீ - கட்டுப்படுத்தும் பணியில் வனத்துறை தீவிரம்!

வால்பாறை அடுத்த அக்காமலை புல் மலை பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சியளிக்கிறது. தீ மற்ற பகுதிகளுக்கு பரவாமல் தடுக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகேயுள்ள புல்மலை பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதையடுத்து, காட்டுத்தீ ஏற்படாமல் தடுக்கும் வகையில், முக்கிய இடங்களில் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்நிலையில், வால்பாறை வனச்சரகத்திற்கு உட்பட்ட அக்காமலை புல் மலை பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. இந்தப் பகுதியில் மாநில விலங்கான வரையாடு, அறிய வகை குரங்குகள், புலி, யானை, காட்டெருமை, சிறுத்தை போன்ற வன விலங்குகள் அதிகம் உள்ளன.



மேலும், அக்காமலை புல் மலை பகுதி தொடர் மலையாக கேரளா மாநிலம் மறையூர் மற்றும் மூணார் பகுதி வரை நீள்கிறது. இப்பகுதிக்கு சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் செல்ல தடை விதித்து வனத்துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.



இந்நிலையில், நேற்று மாலை முதல் அக்காமலை புல்மலையில் புகை மூட்டமாக காணப்பட்டது. இதைத் தொடர்ந்து, இன்று காலை, வால்பாறை வனச்சரக வனத்துறையினர் புல் மலைப்பகுதிக்கு சென்று தீ வனப்பகுதியில் பரவாமல் தடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...