கோவை எம்.எல்.ஏ.க்களுக்கு குவியும் வாழ்த்துக்கள்


சசிகாலா மற்றும் பன்னீர் செல்வம் என அ.தி.மு.க. இரண்டாக பிளவுபட்டுள்ள நிலையில் அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் யாருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கடும் குழப்பத்தில் இருந்தன. இந்த நிலையில், அந்ததந்த தொகுதி மக்கள் தங்கள் எம்.எல்.ஏ.க்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக இருக்க வேண்டி கூறிவந்தனர்.

சசிகலா தலைமையை பன்னீர் செல்வம்  நிராகரத்த சில மணி நேரங்களில் கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத்தொகுதி உறுப்பினர் ஆறுக்குட்டி பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக களம் இறங்கினார். தொடர்ந்து, அவரது தொகுதி மக்கள் சமூக வலைதளங்கள் மூலமாகவும், நேரடியாகவும் ஆறுக்குட்டிக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். ஆங்காங்கே ஆறுக்குட்டியை வாழ்த்தும் வகையில் விளம்பர பதாகைகளும் வைக்கப்பட்டது. 

இந்த நிலையில், கூவத்தூர் விடுதியில் தங்கியிருந்த கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. அருண்குமார் அங்கிருந்து தப்பி கோவை வந்ததாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். 

தொடர்ந்து வடக்கு சட்டமன்ற தொகுதி பொதுமக்கள் அருண்குமாருக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர். சசிகலா அணிக்கு எதிராக நின்றதன் மூலமாக மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்று விட்டதாகவும் பொதுமக்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். 

இந்த நிலையில், அருண்குமார் இரு அணிக்கும் ஆதரவு தராமல் சட்டமன்ற வாக்கெடுப்பை புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...