கோவையில் கஞ்சா விற்பனை - கல்லூரி மாணவர்கள், ஐடி ஊழியர் உட்பட 4 பேர் கைது!

கோவை பாப்பநாயக்கன் பாளையம் மற்றும் ரத்தினபுரி ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள், ஐடி ஊழியர் உட்பட 4 பேரை கைது செய்த ரேஸ்கோர்ஸ் போலீசார், 1,400 கிராம் கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் இருவேறு இடங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் மற்றும் ஐடி ஊழியர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவையில் கஞ்சா புழக்கத்தை தடுக்க மாநகர போலீசார் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் அடிப்படையில், போலீசார் அவ்வப்போது ரோந்து சென்று கஞ்சா வியாபாரிகளை கைது செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கோவை பாப்பநாயக்கன் பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக பந்தய சாலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் விரைந்து சென்ற போலீசார், சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்த மூன்று பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது, கஞ்சா போதையில் இருந்த 3 பேரும் கேரளாவை சேர்ந்த சூர்யா (25), பொள்ளாச்சியை சேர்ந்த அகிலன் (20) மற்றும் புதுக்கோட்டை சார்ந்த இமான்சா (18) ஆகியோர் கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

மென்பொருள் பணியாளராக சூர்யா பணியாற்றுவதும், அகிலன் மற்றும் இமான்சா இருவரும் கல்லூரியில் படித்து வருவதும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. மேலும், இவர்களிடமிருந்து 300 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இதேபோல், ரத்தினபுரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சாஸ்திரி நகர் பகுதியில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த சஞ்சு (19) என்ற இளைஞரையும் போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய சோதனையில், 1கிலோ 100 கிராம் அளவிலான கஞ்சா பொட்டலங்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

இதனையடுத்து அவரை கைது செய்த ரத்தினபுரி போலீசார், கூட்டாளிகள் அமர்நாத், கெளதம் இருவரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Newsletter

கோவில்மேட்டில் டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆட்சியரிடம் மனு

Coimbatore: கோவை கோவில்மேடு பகுதியில் பேருந்து நிறுத்தம், பள்ளி மற்றும் மருத்துவமனை அருகே செயல்பட்டு வரும் இரண்டு டாஸ்மா...

அன்னூர் அருகே 147 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த முதியவர் கைது.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே அனுமதியின்றி மது விற்பனைக்காக 147 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த 62 வயது முதியவரை போலீச...

கோவையில் மீன் பிடிக்கச் சென்ற 13 வயது மாணவன் கொலை; சக மாணவர்கள் 2 பேர் கைது

கோவை இருகூர் அருகே வாய்க்காலில் மீன் பிடிக்கச் சென்ற 7ஆம் வகுப்பு மாணவன், சக மாணவர்களால் மதுபாட்டிலால் தாக்கிக் கொலை செய...

Sri Ramakrishna மருத்துவமனையின் இரண்டு நாள் சுகாதார விழிப்புணர்வு கண்காட்சி Brookfield மாலில் தொடக்கம்

உலக ஆஸ்துமா தினம் மற்றும் உலக செரிமான ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு, Coimbatore Sri Ramakrishna மருத்துவமனை சார்பில் Brook...

“டாஸ்மாக் கடையை மூடுங்கள்” – கோவையில் பெண்கள், குழந்தைகள் திடீர் முற்றுகை போராட்டம்

கோவை: இருகூரில் இருந்து அத்தப்பகவுண்டன்புதூர் செல்லும் சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி 50-...

“நான் தான் எல்லாம்” எண்ணத்தில் எடப்பாடி செயல்படுகிறார்: செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாடுகள் எம்....