கோவையில் கஞ்சா விற்பனை - கல்லூரி மாணவர்கள், ஐடி ஊழியர் உட்பட 4 பேர் கைது!

கோவை பாப்பநாயக்கன் பாளையம் மற்றும் ரத்தினபுரி ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள், ஐடி ஊழியர் உட்பட 4 பேரை கைது செய்த ரேஸ்கோர்ஸ் போலீசார், 1,400 கிராம் கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் இருவேறு இடங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் மற்றும் ஐடி ஊழியர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவையில் கஞ்சா புழக்கத்தை தடுக்க மாநகர போலீசார் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் அடிப்படையில், போலீசார் அவ்வப்போது ரோந்து சென்று கஞ்சா வியாபாரிகளை கைது செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கோவை பாப்பநாயக்கன் பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக பந்தய சாலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் விரைந்து சென்ற போலீசார், சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்த மூன்று பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது, கஞ்சா போதையில் இருந்த 3 பேரும் கேரளாவை சேர்ந்த சூர்யா (25), பொள்ளாச்சியை சேர்ந்த அகிலன் (20) மற்றும் புதுக்கோட்டை சார்ந்த இமான்சா (18) ஆகியோர் கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

மென்பொருள் பணியாளராக சூர்யா பணியாற்றுவதும், அகிலன் மற்றும் இமான்சா இருவரும் கல்லூரியில் படித்து வருவதும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. மேலும், இவர்களிடமிருந்து 300 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இதேபோல், ரத்தினபுரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சாஸ்திரி நகர் பகுதியில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த சஞ்சு (19) என்ற இளைஞரையும் போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய சோதனையில், 1கிலோ 100 கிராம் அளவிலான கஞ்சா பொட்டலங்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

இதனையடுத்து அவரை கைது செய்த ரத்தினபுரி போலீசார், கூட்டாளிகள் அமர்நாத், கெளதம் இருவரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை: திமுக கவுன்சிலர்கள் இருவர் அதிமுகவில் இணைந்தனர்; CPI கவுன்சிலர் ராஜினாமா

கோயம்புத்தூரில் திமுகவைச் சேர்ந்த இரு மாநகராட்சி உறுப்பினர்கள் அதிமுகவில் இணைந்த நிலையில், சிபிஐ கவுன்சிலர் ஒருவர் கட்சி...

கொட்டாப்புளிபாளையம் கிராமத்தில் கதவு உடைத்து திருட முயன்ற முகமூடி திருடர்கள் தப்பியோட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கொட்டாப்புளிபாளையம் கிராமத்தில் நேற்று மாலை 7 மணியளவில் நாச்சிமுத்து வீட்டின் முன்பக...

காங்கேயம் பாப்பினியில் ரூ.2.5 லட்சம் மதிப்பிலான 19 ஆடுகள் திருட்டு; விவசாயிகள் மத்தியில் அச்சம்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பாப்பினியில் விவசாயி பொன்னுசாமியின் தோட்டத்தில் இருந்து நள்ளிரவில் மர்ம நபர்கள் 19 ஆடுகளை...

தாராபுரம் அருகே குடிபோதையில் அண்ணன்-தம்பி மோதல்: அருவாள் தாக்குதலில் அண்ணன் படுகாயம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தம்பி சேனாதிபதி அண்ணன் சந்திரசேகரை அருவாளால் வெட்டிய ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...