தாராபுரம் அருகே மூலனூர் அரசு பள்ளியில் போதை தடுப்பு விழிப்புணர்வு முகாம்

தாராபுரம் அடுத்த மூலனூர் அரசு மேல்நிலை பள்ளியில், வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் நடத்தப்பட்ட போதை தடுப்பு விழிப்புணர்வு முகாமில், மாணவர்களுக்கு போதை பழக்கத்தால் ஏற்படும் தீங்குகள் குறித்து அறிவுரை வழங்கப்பட்டன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே அரசு பள்ளியில் நடைபெற்ற போதை தடுப்பு விழிப்புணர்வு முகாமில் மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

தாராபுரம் அடுத்த மூலனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் போதை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு தாராபுரம் வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும் சார்பு நீதிபதியுமான தர்ம பிரபு தலைமை தாங்கினார்.



இந்த நிகழ்வில் தாராபுரம் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் கலைச்செழியன், செயலாளர் ராஜேந்திரன், வழக்கறிஞர் சித்ரா, மூலனூர் காவல்துறை ஆய்வாளர் நாச்சிமுத்து, மூலனூர் அரசு மருத்துவமனை மருத்துவர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



இந்த நிகழ்வில் மாணவ, மாணவிகளுக்கு போதை பழக்கத்தினால் ஏற்படும் விளைவுகளையும், அதனால் சமுதாயம் எவ்வாறு சீர்கெடுக்கிறது என்பதையும், போதை பழக்கத்திலிருந்து விடுபட விளையாட்டு, ஓவியம், புத்தகம் வாசிப்பது போன்ற பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் கெட்ட பழக்கங்களில் இருந்து விடுபடலாம் என அறிவுரை வழங்கப்பட்டது. அப்போது, மாணவர்களின் சந்தேகங்களுக்கு உரிய விளக்கமும் அளிக்கப்பட்டது.

தாராபுரம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் செயல்பாடுகள் குறித்தும் மாணவர்களிடையே விளக்கப்பட்டது. மேலும் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விடை கூறிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்தப்பட்டது. பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் பாலசுப்பிரமணியன் அனைவரையும் வரவேற்று முகாமை வழி நடத்தினார்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...