தாராபுரம் அருகே மூலனூர் அரசு பள்ளியில் போதை தடுப்பு விழிப்புணர்வு முகாம்

தாராபுரம் அடுத்த மூலனூர் அரசு மேல்நிலை பள்ளியில், வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் நடத்தப்பட்ட போதை தடுப்பு விழிப்புணர்வு முகாமில், மாணவர்களுக்கு போதை பழக்கத்தால் ஏற்படும் தீங்குகள் குறித்து அறிவுரை வழங்கப்பட்டன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே அரசு பள்ளியில் நடைபெற்ற போதை தடுப்பு விழிப்புணர்வு முகாமில் மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

தாராபுரம் அடுத்த மூலனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் போதை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு தாராபுரம் வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும் சார்பு நீதிபதியுமான தர்ம பிரபு தலைமை தாங்கினார்.



இந்த நிகழ்வில் தாராபுரம் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் கலைச்செழியன், செயலாளர் ராஜேந்திரன், வழக்கறிஞர் சித்ரா, மூலனூர் காவல்துறை ஆய்வாளர் நாச்சிமுத்து, மூலனூர் அரசு மருத்துவமனை மருத்துவர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



இந்த நிகழ்வில் மாணவ, மாணவிகளுக்கு போதை பழக்கத்தினால் ஏற்படும் விளைவுகளையும், அதனால் சமுதாயம் எவ்வாறு சீர்கெடுக்கிறது என்பதையும், போதை பழக்கத்திலிருந்து விடுபட விளையாட்டு, ஓவியம், புத்தகம் வாசிப்பது போன்ற பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் கெட்ட பழக்கங்களில் இருந்து விடுபடலாம் என அறிவுரை வழங்கப்பட்டது. அப்போது, மாணவர்களின் சந்தேகங்களுக்கு உரிய விளக்கமும் அளிக்கப்பட்டது.

தாராபுரம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் செயல்பாடுகள் குறித்தும் மாணவர்களிடையே விளக்கப்பட்டது. மேலும் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விடை கூறிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்தப்பட்டது. பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் பாலசுப்பிரமணியன் அனைவரையும் வரவேற்று முகாமை வழி நடத்தினார்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...