தீ விபத்தை எப்படி தடுப்பது..? - கோவை அரசு கலை கல்லூரியில் தீ தடுப்பு விழிப்புணர்வு!

கோடை காலம் நெருங்கி வருவதையொட்டி கோவை அரசு கலைக் கல்லூரியில் தெற்கு மண்டல தீயணைப்பு துறை மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் தீ தடுப்பு வழிமுறைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தீயணைப்புத் துறையினர் செய்து காட்டி விளக்கமளித்தனர்.



கோவை: கோவை அரசு கலைக் கல்லூரியில் தீயணைப்பு துறை சார்பில் மாணவர்களுக்கு தீ தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

கோடை காலம் நெருங்கி வரும் நிலையில் தீயணைப்பு துறை சார்பில் பல்வேறு இடங்களில் தீ தடுப்பு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.



அதன்படி கோவை அரசு கலைக் கல்லூரியில் கோவை தெற்கு மண்டல தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை சார்பில் தீ தடுப்பு வழிமுறைகள் குறித்து கல்லூரி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.



இதில் தீயணைப்பு துறை அதிகாரிகள் சிவராஜ், செல்வ மோகன், முருகையன் ஆகியோர் முன்னிலையில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினர் தீ தடுப்பு வழிமுறைகள் குறித்து செய்து காண்பித்தனர்.



இந்த நிகழ்வில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறையினர் பயன்படுத்தும் தீ தடுப்பு கருவிகள், தீ அணைப்பான் கருவிகளை உபயோகிக்கும் முறை, பேரிடர் காலங்களில் எவ்வாறு செயல்படுவது, தீயை கட்டுப்படுத்தும் முறைகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போன்றவை குறித்து செய்து காண்பித்து விளக்கம் அளிக்கப்பட்டது.



மேலும் மாணவர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.



இந்நிகழ்வில் கோவை அரசு கலைக் கல்லூரி முதல்வர் உலகி, கல்லூரி பேராசிரியர்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தீ தடுப்பு வழிமுறைகள் குறித்து தெரிந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...