உடுமலை அருகே கூட்டாற்றில் பாலம் கட்டித்தர வேண்டும் - மலைவாழ் மக்கள் கோரிக்கை!

உடுமலை அருகேயுள்ள தளிஞ்சி மலைவாழ் மக்கள், ரேஷன் பொருட்கள் வாங்க கூட்டாற்றை கடக்க வேண்டியுள்ள நிலையில், மழைக்காலங்களில் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவதாக கூறும் அப்பகுதி மக்கள், கூட்டாற்றின் குறுக்கே பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள கூட்டாற்றி பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



உடுமலை அடுத்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் அமராவதி வனச்சரகத்துக்கு உட்பட்டது தளிஞ்சி மலைவாழ் குடியிருப்பு. இந்த பகுதியில் 150க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.



இரு மலைகளுக்கு இடையில் உள்ள சமவெளியில் மலைவாழ் மக்கள் வீடுகள் கட்டி, விவசாய சாகுபடிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அப்பகுதியில் ரேஷன் கடை வசதி இல்லாததால், ரேஷன் பொருட்களை வாங்க சின்னாறு செக் போஸ்ட் பகுதிக்கு வாரத்தில் ஒரு நாள் தளிஞ்சி கிராம மக்கள் வர வேண்டி உள்ளது.

சின்னாறு வரை கரடு முரடான பாறைகள் நிறைந்த ஆறு கிலோமீட்டர் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள மண் பாதையில் பயணிக்க வேண்டும்.



வழித்தடத்தில் கூட்டாறு ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்படாததால் மழை காலங்களில் ஆற்றை கடக்க முடியாத நிலை இருந்து வருகிறது.

இதனால் ரேஷன் பொருட்களை வாங்க பொதுமக்கள் பல கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று, கூட்டாற்றை கடக்க முடியாமல் குடியிருப்புக்கு செல்ல வேண்டியுள்ளது. இல்லாவிட்டால் கேரள வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சம்பக்காடு சென்று அங்கிருந்து பஸ் பிடித்து சின்னாறு ரேஷன் கடைக்கு வர வேண்டி உள்ளது.

பல்வேறு இடையூறுகளை சந்திக்க வேண்டியிருப்பதால் ரேஷன் பொருட்களை பெற முடியாமல் தளிஞ்சி கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக கூட்டாற்றின் குறுக்கே, பாலம் கட்ட வேண்டும் என்றும், ரேஷன் பொருட்கள் சீராக விநியோகிக்க வேண்டும் எனவும், அதிகாரிகளிடம் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கப்படாததால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் களஆய்வு மேற்கொண்டு அந்த பகுதியில் பாலம் கட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...