கோவையில் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டு விற்பனை - முதியவர் கைது!

கோவை ராமநாதபுரம் அருகே தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த பாப்பம்பட்டி பிரிவை சேர்ந்த கணேசன் (56) என்ற முதியவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 40 லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.5,680 பணம் பறிமுதல் செய்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் ராமநாதபுரம் அருகே தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த முதியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தமிழ்நாட்டில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சட்ட விரோதமாக கேரள லாட்டரிகளையும், மூன்றாம் நம்பர் லாட்டரிகளையும் கோவையில் சில சமூக விரோத கும்பல் விற்பனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கோவை ராமநாதபுரம் பகுதியில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில், அப்பகுதியில் சோதனை நடத்திய போது, ராமநாதபுரம் அடுத்த பங்கஜம் மில் சாலையில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்த முதியவர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

இதனையடுத்து அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர், பாப்பம்பட்டி பிரிவை சேர்ந்தவர் கணேசன் (56) என்பதும் கேரளாவிலிருந்து வரவழைக்கப்படும் லாட்டரி சீட்டுகளை சட்டவிரோதமாக கோயம்புத்தூரில் விற்பனை செய்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ராமநாதபுரம் போலீசார் கணேசன் இடமிருந்து 40 லாட்டரி சீட்டுகளையும் 5,680 ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். இதனிடையே சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட லாட்டரிகளை விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில், கோவையில் லாட்டரி புழக்கத்தை தடுக்க தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்த வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...