கோவையில் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டு விற்பனை - முதியவர் கைது!

கோவை ராமநாதபுரம் அருகே தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த பாப்பம்பட்டி பிரிவை சேர்ந்த கணேசன் (56) என்ற முதியவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 40 லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.5,680 பணம் பறிமுதல் செய்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் ராமநாதபுரம் அருகே தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த முதியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தமிழ்நாட்டில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சட்ட விரோதமாக கேரள லாட்டரிகளையும், மூன்றாம் நம்பர் லாட்டரிகளையும் கோவையில் சில சமூக விரோத கும்பல் விற்பனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கோவை ராமநாதபுரம் பகுதியில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில், அப்பகுதியில் சோதனை நடத்திய போது, ராமநாதபுரம் அடுத்த பங்கஜம் மில் சாலையில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்த முதியவர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

இதனையடுத்து அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர், பாப்பம்பட்டி பிரிவை சேர்ந்தவர் கணேசன் (56) என்பதும் கேரளாவிலிருந்து வரவழைக்கப்படும் லாட்டரி சீட்டுகளை சட்டவிரோதமாக கோயம்புத்தூரில் விற்பனை செய்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ராமநாதபுரம் போலீசார் கணேசன் இடமிருந்து 40 லாட்டரி சீட்டுகளையும் 5,680 ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். இதனிடையே சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட லாட்டரிகளை விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில், கோவையில் லாட்டரி புழக்கத்தை தடுக்க தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்த வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...