நாக்பூரில் குடிநீர் திட்ட கருத்தரங்கு - கோவை மாநகராட்சி குடிநீர் திட்டத்தை பாராட்டி நினைவுப்பரிசு!

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில், மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை சார்பில் 24 மணி நேர குடிநீர் திட்டம் குறித்த கருத்தரங்கில், கோவை மாநகர குடிநீர் திட்டத்தின் நவீன செயல்முறைகளை பாராட்டி, நினைவு பரிசு வழங்கப்பட்டது.


கோவை: நாக்பூரில் நடைபெற்ற மத்திய அரசின் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில், கோவை மாவட்ட குடிநீர் திட்டத்தை பாராட்டி நினைவு பரிசு வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின்‌ வீட்டு வசதி மற்றும்‌ நகர்ப்புற விவகாரங்கள்‌ துறையின்‌ சார்பில்‌ வட இந்தியாவின்‌ 10 மாநிலங்களுக்கான மண்டலத்திற்கான 24 மணி நேர குடிநீர்‌ திட்டங்கள்‌ குறித்த கருத்தரங்கு மஹாராஷ்டிரா மாநிலம்‌ நாக்பூரில்‌ நடைபெற்றது.

கடந்த பிப்ரவரி 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில்‌ நடைபெற்ற இந்த கருத்தரங்கில்‌, கோவை மாநகராட்சியின்‌ 24 மணி நேர குடிநீர்‌ திட்டம்‌ குறித்த பல நவீன செயல்முறைகளை பாராட்டி நினைவு பரிசு வழங்கப்பட்டது.

இந்த நினைவு பரிசை, திட்ட மேலாண்மை ஆலோசனை குழு தலைவர்‌ கோபாலகிருஷ்ணன்‌, சூயஸ்‌ நிறுவன திட்ட மேலாளர்‌ சங்கராம்‌ பட்நாயக் மற்றும் புவியியல்‌ நிபுணர்‌ சத்யநலம்‌ ஆகியோர் மாநகராட்சி ஆணையர்‌ பிரதாப்பிடம் வழங்கினர்.

கோவை மாநகராட்சியின் பிரதான அலுவலக கூட்டரங்கில், மாநகராட்சி ஆணையர்‌ பிரதாப் தலைமையில் நடைபெற்ற‌ நுகர்வோர்‌ அமைப்புகளுடனான ஆலோசனைக்‌ கூட்டத்தின் போது, நினைவு பரிசினை வழங்கினர்.



இந்த நிகழ்வின் போது, மாநகர பொறியாளர்‌ இளங்கோவன்‌ மற்றும்‌ மாநகராட்சி உயர்‌ அதிகாரிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...