கோவையில் ஹெல்மெட் அவசியத்தை உணர்த்த தன்னார்வல அமைப்புடன் கைகோர்த்த காவல்துறை

கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியின் முன்பு சோதனை சாவடி அமைத்து உயிர் அறக்கட்டளை கூட்டமைப்புடன் இணைந்து போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்கள் மீது 40 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.


கோவை: கோவையில் தன்னார்வல அமைப்புடன் போலீசார் இணைந்து தற்காலிக சோதனை சாவடி அமைத்து வாகன ஓட்டிகளை கண்காணித்தனர்.

கோயம்புத்தூர் நகரக் காவல் துறையினர், சாலை விபத்துகளைக் குறைக்கும் முயற்சியாகவும், பொதுமக்களிடையே சாலைப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் ஒருபகுதியாக கோவை நகரில் உள்ள பல்வேறு கல்லூரிகள் மற்றும் உயிர் அறக்கட்டளை என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து, நகரில் 100% ஹெல்மெட் அணிவதை ஊக்குவிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.



இது ஒரு புதிய முயற்சியாக இல்லாவிட்டாலும், அதன் நோக்கம் வாரத்திற்கு ஒருமுறை, போக்குவரத்து போலீசார், கல்லூரி மாணவர்கள் மற்றும் உயிர் அமைப்புடன் இணைந்து, அந்தந்த கல்லூரி முன்பு சோதனை சாவடி அமைத்து, வாகனங்கள் செல்வதைக் கண்காணிக்கின்றனர்.

இந்த சோதனையின் போது ஹெல்மெட் அணிவதை ஊக்குவிக்கும் வகையிலும், ஹெல்மெட் அணிவது குறித்து தன்னார்வலர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். மறுபுறம் காவல்துறையினர் ஹெல்மெட் அணியாமல் அத்துமீறி நுழைபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்கின்றனர்.

இந்நிலையில் இன்று ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியின் முன்பு உயிர் கூட்டமைப்புடன் இணைந்து போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதில் ஹெல்மெட் அணியாமல் வந்தவரக்ள மீது 40 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

மேலும் ஹெல்மெட் அணியாமல் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை கண்காணிக்கும் பணியில் 15-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர். இதை தவிர குனியமுத்தூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் சண்முகம் தலைமையிலான குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...