கோவையில் ஹெல்மெட் அவசியத்தை உணர்த்த தன்னார்வல அமைப்புடன் கைகோர்த்த காவல்துறை

கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியின் முன்பு சோதனை சாவடி அமைத்து உயிர் அறக்கட்டளை கூட்டமைப்புடன் இணைந்து போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்கள் மீது 40 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.


கோவை: கோவையில் தன்னார்வல அமைப்புடன் போலீசார் இணைந்து தற்காலிக சோதனை சாவடி அமைத்து வாகன ஓட்டிகளை கண்காணித்தனர்.

கோயம்புத்தூர் நகரக் காவல் துறையினர், சாலை விபத்துகளைக் குறைக்கும் முயற்சியாகவும், பொதுமக்களிடையே சாலைப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் ஒருபகுதியாக கோவை நகரில் உள்ள பல்வேறு கல்லூரிகள் மற்றும் உயிர் அறக்கட்டளை என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து, நகரில் 100% ஹெல்மெட் அணிவதை ஊக்குவிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.



இது ஒரு புதிய முயற்சியாக இல்லாவிட்டாலும், அதன் நோக்கம் வாரத்திற்கு ஒருமுறை, போக்குவரத்து போலீசார், கல்லூரி மாணவர்கள் மற்றும் உயிர் அமைப்புடன் இணைந்து, அந்தந்த கல்லூரி முன்பு சோதனை சாவடி அமைத்து, வாகனங்கள் செல்வதைக் கண்காணிக்கின்றனர்.

இந்த சோதனையின் போது ஹெல்மெட் அணிவதை ஊக்குவிக்கும் வகையிலும், ஹெல்மெட் அணிவது குறித்து தன்னார்வலர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். மறுபுறம் காவல்துறையினர் ஹெல்மெட் அணியாமல் அத்துமீறி நுழைபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்கின்றனர்.

இந்நிலையில் இன்று ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியின் முன்பு உயிர் கூட்டமைப்புடன் இணைந்து போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதில் ஹெல்மெட் அணியாமல் வந்தவரக்ள மீது 40 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

மேலும் ஹெல்மெட் அணியாமல் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை கண்காணிக்கும் பணியில் 15-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர். இதை தவிர குனியமுத்தூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் சண்முகம் தலைமையிலான குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...