உடுமலையில் கால்நடை பல்கலைக்கழக கட்டிடத்தைத் திறக்க கோரிக்கை!

உடுமலை அருகே குடிமங்கலம் பண்ணைகிணறு ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள கால்நடை பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி மைய கட்டிடத்தை விரைவில் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் பண்ணை கிணறு ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள கால்நடை பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி மைய கட்டிடத்தைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயத்துடன் இணைந்த தொழிலாகக் கால்நடை வளர்ப்பு நடைபெற்று வருகிறது. கடந்த ஆட்சியின்போது குடிமங்கலம் ஒன்றியம் பண்ணைகிணறு ஊராட்சியில் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி மையம் அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தற்போது சுமார் ரூ.260 கோடியில் தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி மைய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி மைய கட்டிடங்கள் கட்டுமான பணிகள் நிறைவு பெறும் தருவாயில் உள்ள நிலையில் கால்நடை பல்கலைக்கழகத்தில் பயிலும், மாணவர்களுக்கான வகுப்புகள் உடுமலையில் உள்ள தனியார் பள்ளியில் தற்காலிகமாக நடைபெற்று வருகிறது.

பண்ணைகிணறு ஊராட்சியில் அனைத்து விதமான வசதிகளுடன் ஆய்வகங்களுடன் கட்டிடம் கட்டப்படுகிறது. கட்டுமான பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளதால், பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் எனப்பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...