'உடல் உறுப்புகளை தானம் செய்யுங்கள்..!' - கோவை ஏர்போர்ட்டில் மாணவர்கள் நாடகம்!

கங்கா மருத்துவமனை செவிலியர் கல்லூரி மாணவர்கள், கோவை விமான நிலைய வளாகத்தில் உடல் உறுப்பு தானம் மற்றும் தோல் உறுப்பு தானம் குறித்த நாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



கோவை: கோவை விமான நிலையத்தில் தனியார் செவிலியர் கல்லூரி மாணவர்கள் உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



கோவை வட்டமலை பாளையம் பகுதியில் உள்ள கங்கா மருத்துவமனை செவிலியர் கல்லூரியில் ஏராளமான மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவர்கள் 25-க்கும் மேற்பட்டோர், கோவை விமான நிலைய வளாகத்தில் உடல் உறுப்பு தானம் மற்றும் தோல் உறுப்பு தானம் குறித்த நாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



இந்த நாடகம் விமான நிலைய பயணிகளிடம் வரவேற்பைப் பெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்கள் கூறுகையில், கோவை மாநகரம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் முகபாவனை நாடகம் நடத்தி வருகிறோம். பொதுமக்கள் இருசக்கர வாகனம் ஓட்டும்போது ஹெல்மெட் அணிய வேண்டும், தோல் உறுப்பு தானம் செய்ய வேண்டும், கார் ஓட்டும்போது சீட் பெல்ட் அணிய வேண்டும். மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்கக் கூடாது என்று வேண்டுகோள் விடுத்தனற்.



நிகழ்ச்சியின் முடிவில் கோவை விமான நிலைய இயக்குநர் செந்தில்வளவன், கல்லூரி மாணவர்களை பாராட்டினார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...