முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா- கிணத்துக்கடவு அதிமுகவினர் கொண்டாட்டம்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாளை கோவை கிணத்துக்கடவு பகுதியில் அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர். எம்.எல்.ஏ தாமோதரன் கலந்து கொண்டு தொழிற்சங்க கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.


கோவை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75 வது பிறந்தநாள் விழா இன்று அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, கிணத்துக்கடவு பழைய பேருந்து நிலையம் முன்பு நகர அதிமுக சார்பில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.



நகர கழக செயலாளர் மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், பழைய பேருந்து நிலையம் பகுதியில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் செ.தமோதரன் மலர் தூவி மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.



இதேபோல், கிணத்துக்கடவு காய்கறி சந்தை முன்பு அண்ணா தொழிற்சங்கம் சார்பில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் எம்.எல்.ஏ தாமோதரன் கலந்து கொண்டு தொழிற்சங்க கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து, வடபுதூர் ஊராட்சிக்கு உட்பட்ட காந்தி நகரில் அதிமுக கிளைக் கழக செயலாளர் சிவலிங்கம் தலைமையில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்தும் மலர்கள் தூவியும் மரியாதை செய்யப்பட்டது.



பின்னர் 400 பேருக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. இந்த பிறந்த நாள் விழாவில் அதிமுக நிர்வாகிகளான கண்ணம்மாள், தங்கராஜ், லட்சுமணன், கோபால், வினு, மாரிமுத்து, நடராஜ், வெள்ளிங்கிரி, முருகேஷ், சிவா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...