குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுத்ததில் கோவை முதலிடம் - மாவட்ட எஸ்.பி தகவல்

தமிழ்நாட்டிலேயே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு அதிகளவு தண்டனை பெற்றுக் கொடுத்ததில், கோவை முதலிடத்தில் உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தெரிவித்துள்ளார்.



கோவை: கோவை கஞ்சா சாக்லேட்டுகள் வழக்கமான சாக்லேட்டுக்கள் போலவே இருக்கும், ஆனால் இதில் 15 சதவீதம் கஞ்சாவைக் கலந்து விற்பனை செய்வதாகவும், பொதுமக்கள் உஷாராக இருக்கும்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தெரிவித்துள்ளார்.



கோவை மாவட்டத்தில் பொதுமக்களிடமிருந்து திருடப்படும் மற்றும் தவறவிடும் செல்போன்களை போலீசார் மீட்டு அவ்வப்போது மாவட்ட கண்காணிப்பாளர் முன்னிலையில் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.



அந்த வகையில், இன்று சுமார் 19 லட்சம் ரூபாய் மதிப்பிலான 104 செல்போன்கள் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் பேசியதாவது:



தமிழ்நாட்டிலேயே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு அதிகளவு தண்டனை பெற்றுக் கொடுத்ததில், கோவை முதலிடத்தில் உள்ளது. கஞ்சா சாக்லேட்டுகள் வழக்கமான சாக்லேட்டுக்கள் போலவே இருக்கும், ஆனால் இதில் 15 சதவீதம் கஞ்சாவைக் கலந்து விற்பனை செய்கின்றனர். பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும்.

பவானி ஆற்றில், உயிரிழப்பு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது. கஞ்சாவை அனைவரும் கடத்துகின்றனர். ஆகையால் இதில் வடமாநிலத்தவருக்கு மட்டும் தான் தொடர்பு உள்ளது எனச் சொல்ல வேண்டாம். கூரியர் மூலம் வடமாநிலங்களிலிருந்து கஞ்சாவை அனுப்புகின்றனர். அதையும் கண்காணித்து வருகிறோம்.

குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட 1,550 குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். NDPS சட்டத்தின் கீழ் 53 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் தொடர்புடைய 68பேர் கைதுசெய்யப்பட்டு சுமார் 312.5. கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு, பத்ரி நாராயணன் தெரிவித்தார்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...