முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா - வால்பாறையில் அதிமுகவினர் கொண்டாட்டம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழாவை, கோவை மாவட்டம் வால்பாறையில் அதிமுகவினர் வெகுவிமரிசையாக கொண்டாடினர். ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து அதிமுகவினர் மரியாதை செலுத்தினர்.



கோவை: கோவை ஓபிஎஸ் அணி சார்பில் வால்பாறை காந்திசிலை பேருந்து நிலையம் பகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உருவ படம் வைத்து, அதற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.



பின்னர், அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

நிகழ்வில் நகர் செயலர் மிக்சர் கடை முருகன், நகர துணை செயலாளர் கொங்கு மாரிமுத்து, அவை தலைவர் ராமராஜ், மாவட்ட பிரதிநிதி ஆணைமுடி செல்லதுரை, வார்டுசெயலாளர் காஞ்சமலை மாரிசாமி, துணை தலைவர் அந்தோணி மற்றும் சுரேஷ் மற்றும் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.



அதேபோல, வால்பாறை நகர அதிமுகவினர் சார்பில் நகர செயலாளர் அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

அதை போல் நகராட்சி அலுவலகம் மற்றும் புதிய பேருந்து நிலையம் பகுதியில் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அவை தலைவர் சுடர் பாலு, தலைமையில் நகரத் துணைச் செயலாளர் பொன் கணேஷ், 17 வார்டு உறுப்பினர் மணிகண்டன், பெருமாள் சசிகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

Newsletter

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...