கோவையில் சிறுவாணி இலக்கியத் திருவிழா - நடிகர் சிவக்குமார் பங்கேற்பு!

கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான சிறுவாணி இலக்கியத் திருவிழா, வரும் 25, 26 ஆம் தேதிகளில் நடக்கிறது. தொடக்க விழாவில் நடிகர் சிவக்குமார் கலந்துக் கொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளனார்.


கோவை: தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் வெளியிட்ட அறிக்கையின் படி ஆண்டுக்கு நான்கு இலக்கியத் திருவிழாக்கள் நடத்தப்படவுள்ளது. அதன்படி,கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான சிறுவாணி இலக்கியத் திருவிழா நாளை (25.02.2023) மற்றும் நாளை மறுநாள் (26.02.2023) ஆகிய இரு தேதிகளில் நடைபெறுவதாக கோவை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த இலக்கிய திருவிழா பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளனர். வரும் 25ம் தேதி நடைபெறும் தொடக்க விழாவில், திரை கலைஞர் சிவக்குமார் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டு அரங்குகளில் 40 பேச்சாளர்கள் 30 தலைப்புகளில் இலக்கிய உரையாடல்களை நிகழ்த்த உள்ளனர். இவற்றில் இலக்கிய வரலாறுகள், கதைகள், கவிதைகள், தமிழ் பண்பாடு, நிகழ்த்துகலைகள் அனைத்தும் இடம்பெற உள்ளன. மேலும், இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த இலக்கிய திருவிழாவில் 2000 பங்கேற்பாளர்கள் கலந்து கொள்ளும் வகையில் தனித்தனி அரங்குகள் மற்றும் விழாவினை கண்டு மகிழ அனைத்து வகை ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறுவாணி இலக்கிய திருவிழாவில் மாணவர்கள், தமிழ் இலக்கிய ஆர்வலர்கள், ஆராய்ச்சியாளர்கள், இலக்கிய அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அழைப்பு விடுத்துள்ளார்.

Newsletter

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியீடு

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. மாணவர்கள் பதிவு எண் மற்றும்...

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...