கோவை மாநகராட்சி பகுதிகளில் நடக்கும் பணிகளை ஆய்வு செய்த ஆணையர் - விரைந்து முடிக்க உத்தரவு!

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில்‌ நடைபெற்று வரும்‌ சாலைப் பணிகளை மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளைத் தரமாகவும்‌, விரைவாகவும்‌ செய்து முடித்து பயன்பாட்டிற்குக் கொண்டுவரும்படி உத்தரவு.


கோவை: கோவை மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் சாலைப் பணிகளை விரைந்து முடிக்கச் சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு மாநகராட்சி ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மத்திய மண்டலம்‌ வார்டு எண்‌.63-க்குட்பட்ட ராமநாதபுரம்‌, 80 அடி சாலையில்‌ தமிழ்நாடு நிலையான நகர்ப்புற சாலைகள்‌ மேம்பாட்டுத் திட்டத்தின்‌ கீழ் (2022-2023) ரூ.26 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ 140 மீட்டா்‌ தொலைவிற்குச் சாலைப் பணிகள்‌ நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையாளா்‌ மு.பிரதாப்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.



அதனைத்‌ தொடர்ந்து, மத்திய மண்டலம்‌ வார்டு எண்‌.63-க்குட்பட்ட ராமநாதபுரம்‌, 80 அடி சாலையில்‌ சூயஸ்‌ திட்டத்தின்கீழ்‌ குடிநீர் குழாய்‌ பதிக்கும்‌ பணிகள்‌ நடைபெற்று வருவதை நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைவாக செய்து முடிக்க சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு உத்தரவிட்ட பின்பு,



வார்டு எண்‌.66-க்குட்பட்ட பெரியார்‌ நகர்ப்‌ பகுதியில்‌ தமிழ்நாடு நிலையான நகாப்புற சாலைகள்‌ மேம்பாட்டுத் திட்டத்தின்‌ (TURIP 2022-2023) கீழ் ரூ.26 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ சாலைப்பணிகள்‌ நடைபெற்று வருவதை நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.



பின்னர்‌, மத்திய மண்டலம்‌ வார்டு எண்‌.64-க்குட்பட்ட புலியகுளம்‌, ஜெகநாதன்‌ வீதியில்‌ தமிழ்நாடு நிலையான நகர்ப்புற சாலைகள்‌ மேம்பாட்டுத் திட்டத்தின்‌(TURIP2022-2023) கீழ்‌ ரூ.7.69 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ 200 மீட்டர் தொலைவிற்கு சாலைப்பணிகள்‌ நடைபெற்று வருவதை நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்த ஆணையாளர்‌, அப்பகுதியில்‌ உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிடச் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்‌.



அதனைத்‌ தொடா்ந்து, வார்டு எண்‌.66-க்குட்பட்ட பந்தயச் சாலை, Tea Estate சாலையில்‌ தமிழ்நாடு நிலையான நகாப்புற சாலைகள்‌ மேம்பாட்டுத் திட்டத்தின்‌ (TURIP 2022-2023) கீழ் ரூ.15.82 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ 265 மீட்டா் தொலைவிற்கு சாலைப்பணிகள்‌ நடைபெற்று வருவதையும்‌,



வார்டு எண்.66-க்குட்பட்ட எல்‌.எம்‌.எல்‌.காலனி முதல்‌ வீதியில்‌ தமிழ்நாடு நிலையான நகர்ப்புற சாலைகள்‌ மேம்பாட்டுத்திட்டத்தின்‌ (2022-2023) கீழ் ரூ.9.65 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ 225 மீட்டர் தொலைவிற்கு சாலைப்பணிகள்‌ நடைபெற்று வருவதையும்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.



பின்னர்‌, கோயம்புத்தூர்‌ மாநகராட்சி வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.26-க்குட்பட்ட பீளமேடு, பயனீமில்‌ சாலையில்‌ மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில்‌ தனியார்‌ பங்களிப்புடன்‌ புதிதாக அமைக்கப்பட்ட சத்துணவுக் கூடத்தை மாநகராட்சி ஆணையாளர் திறந்து வைத்துப் பார்வையிட்டு, பள்ளி வளாகத்தில்‌ மரக்கன்று நட்டு வைத்தார்‌.



இந்த ஆய்வுகளின்போது, பணிகள்‌ குழு தலைவர்‌ சாந்தி முருகன்‌, மாமன்ற உறுப்பினர் சித்ரா வெள்ளியங்கிரி, மாநகராட்சி கல்வி அலுவலர்‌ மரியசெல்வம்‌, உதவி செயற்பொறியாளர்‌ புவனேஸ்வரி, மண்டல சுகாதார அலுவலர்‌ குணசேகரன்‌, உதவிப் பொறியாளர்‌ சக்திவேல்‌,பாலச்சந்தா, சுகாதார ஆய்வாளர்கள்‌ ஜெகநாதன்‌, ஸ்ரீரங்கராஜ்‌, தலைமையாசிரியர்‌ அருளானந்தன்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...