கோவை பி.என்.பாளையத்தில் மேம்பாலப் பணிகள் தாமதம் - அடிக்கடி நிகழும் விபத்துகள்!

பெரியநாயக்கன்பாளையத்தில் மேம்பாலம் கட்டும் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதால், வாகனங்கள் முன் அறிவிப்பு இன்றி ஒருவழிப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது. இந்நிலையில் மேட்டுப்பாளையத்திலிருந்து கோவை நோக்கி வந்த பேருந்து எல்.எம்.டபிள்யூ பிரிவு அருகே சாலையோர சுவரில் மோதி நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: பெரியநாயக்கன்பாளையத்தில்மேம்பாலம் கட்டும் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதால், பேருந்துகள் அடிக்கடி விபத்தில் சிக்குவதாகப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பெரியநாயக்கன் பாளையத்தில் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா முதல் சாமிசெட்டிபாளையம் பிரிவு வரை 1.4 கிலோ மீட்டர் நீளத்துக்கு, சுமார் ரூ.85 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டுமான பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில், எல்.எம்.டபிள்யூ பிரிவு பகுதியிலிருந்து சாமிசெட்டிபாளையம் வரை தூண்கள் அமைக்கும் பணி நிறைவடைந்து பல மாதங்களாகத் தூண்களுக்கு இடையே காங்கீரிட் ஓடுதளம் அமைக்கும் பணிகள் மெதுவாக நடந்து வருகின்றது.

இந்நிலையில் இந்த சாலை ஊட்டி, மைசூர் போன்ற பகுதிகளுக்குச் செல்ல முக்கியமானது என்பதால் வாகன போக்குவரத்து அதிகரித்துக் காணப்படும். இதனால் மேம்பாலப் பணிகளை விரைவாக மேற்கொள்ள வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.

ஆனால் மாற்றுவழி பாதையும் முன் ஏற்பாடுகள் செய்யப்படாமல் வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளதால் விபத்துகள் அதிகரித்துள்ளது. குறிப்பாக எல்.எம்.டபிள்.யூ பிரிவு வழியாக ஒரு வழிப்பாதையில் பேருந்துகள் அத்துமீறிச் செல்கின்றன.

இதனால் விபத்துகள் அதிகரிக்கிறது. இந்நிலையில் மேட்டுப்பாளையத்திலிருந்து கோவை நோக்கி எல்.எம்.டபிள்யூ., பிரிவு அருகே ஒரு வழிப்பாதையில் பேருந்து ஒன்று வந்தது.

இந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள கடைகளுக்கு அருகில் உள்ள சுவரில் மோதி நின்றது. அதிர்ஷ்டவசமாகக் கடைகளுக்குள் புகாமல் இருந்ததால் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது. பேருந்தில் இருந்தவர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, பெரியநாயக்கன் பாளையம் மேம்பாலப் பணிகள் தொடர்ந்து மந்தமாக நடைபெற்று வருகிறது. மாற்றுப்பாதைகளிலும் பல இடங்களில் சாலை முற்றிலும் சேதமடைந்துள்ளன. உடனடியாக சாலைகளைச் சீரமைத்துத் தர வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...

கோவையில் வேகமாக பரவும் 'Madras Eye' நோய்: மக்கள் அலெர்ட்டாக இருக்க டாக்டர்கள் எச்சரிக்கை

கோவையில் 'Madras Eye' நோய் பாதிப்பு அதிகரித்து வருவதால், நாளொன்றுக்கு 10 பேர் வீதம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற...